யாழ். கொலை: விரிவுரையாளரின் சடலமானது இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலமானது நேற்றையதினம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

குறித்த விரிவுரையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகள் மற்றும் மகளின் கணவரால் படுகொலை செய்யப்பட்டு தனங்களப்பு பகுதியில் வீசப்பட்டார். பின்னர் கொலை சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகி இருந்தனர்.

அதன்பின்னர் விரிவுரையாளரின் மகன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், சடலத்தையும் மீட்டனர்.

இந்நிலையில், குறித்த விரிவுரையாளரின் இறுதிச் சடங்கு இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் சடலம் கோம்பயன்மணல் மயானத்தில் புதைக்கப்பட்டது.

Related posts

யாழ்ப்பாண மாவட்ட இராணுவத்தினரால் இரத்த தானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள்கள் மீட்கப்பட்டன.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – சரசாலை பகுதியில் நேற்று (21-03-2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.