முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படைகள் திடீர் சோதனை நடத்தின

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இவ்விரு மாநிலங்களிலும் பாஜ மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில், அவர், புதுச்சேரி காரைக்காலில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார். இதற்காக புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் ஒன்றில் அவர் காரைக்காலில் உள்ள கல்லூரி ஒன்றின் வளாகத்தில் வந்து இறங்கினார். அவரை பாஜவினர் வரவேற்றனர்.

அவரின் வருகையின் போது அங்கு வந்திருந்த தேர்தல் பறக்கும் படையினர், ஹெலிகாப்டரை தீவிரமாக சோதனை செய்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Related posts

 சேலம் இடைப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண் குமார் மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.

“திமுக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக” வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

“மதுரைக்காக நான் நிறைய செய்ய விரும்பினேன், ஆனால் என்னால் முடியவில்லை,” என்று தியாகராஜன் வருத்தத்துடன் கூறினார்.