“திமுக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக” வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து வாசன் கூறியதாவது:தென்னிந்தியாவிலேயே தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தும் விதமாக, தமிழகத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு மிக மோசமாக உள்ளது. கொலை, கொள்ளை, போதை பொருள், பாலியல் தொந்தரவுகளை தி.மு.க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பி, ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மகளிர் தான் அடித்தளம்.

கோவிலுக்குப் போகாதவர்களுக்கும், கோவிலைப் பற்றி கவலைப்படாத அரசுக்கும், நெற்றியிலே பொட்டு வைப்பதே தவறு என நினைப்பவர்களுக்கும் வாக்களிக்காதீர்கள். அனைத்து மதமும் சமம் என கருதுவோருக்கு வாக்களியுங்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தான், மகளிருக்கு அதிக திட்டங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், தி.மு.க.,வினர் வாக்கு வங்கி அரசியல் தான் செய்கின்றனர். மத்திய அரசை எதிரி கட்சியாக பார்ப்பதால் தான் தமிழகம் வளர முடியவில்லை.இவ்வாறு வாசன் கூறினார்.

Related posts

சிறுவயது வாக்குறுதியால் ஊக்கமடைந்த எளிய ரோபோக் கை — மெக்சிகோ விஞ்ஞானிகளின் புதிய முயற்சி

இரான் உத்தரவு காலக்கெடு நெருங்கும் நிலையில் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் என டிரம்ப் எச்சரிக்கை

 சேலம் இடைப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண் குமார் மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.