ஆனந்தபுர மாவீரர்களின் 17வது ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு பெல்ஜியத்தில் நடைபெற்றது.

வட தமிழீழம், முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பெல்சியம் Antwerpen மாநகரில் 06.04.2024 அன்று மாலை 16.30 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.

பின்னர் மாவீரர்கள் பொதுமக்களின் குருதியில் உருவான தமிழிழ தேசியக்கொடியினை பெல்சியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப் பொருப்பாளர் ஏற்றிவைத்தார்.

பின்னர் ஆனந்தபுர நாயகர்களின் திருவுருப்படங்களுக்கு வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் மலர்தூவி சுடர்வணக்கம் செலுத்தினர்.

வணக்க நிகழ்வில் எழுச்சிப்பாடல்கள், கவிதைகள், சிறப்பு பேச்சுக்கள் இடம்பெற்றதோடு, இறுதியாக தமிழீழ தேசியக் கொடி கையேற்றலுடன் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலுடன் வீரவணக்க நிகழ்வு நிறைவு பெற்றது .

“தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம்”

நன்றி

Related posts

கடலடி நிழல் யுத்தம்: நேட்டோ–ரஷ்யா பதற்றம் ஆபத்தான புதிய கட்டத்தில்

சரிவடையும் போர்நிறுத்தம்: இஸ்லாமாபாத் ஒப்பந்தமும் பிராந்தியப் போரின் மீள்வருகையும்

இலங்கை உள்நாட்டுப் போரை இரகசியமாகத் தூண்டிய இஸ்ரேல்