தமிழர் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் கையெழுத்து போராட்டம்.

யாழ்ப்பாணம்.

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளிக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை (15) கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை  குழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதிக்கோரிய கையெழுத்துப் போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம்  மருதனார்மடம் பகுதியில்  முன்னெடுக்கப்பட்டது.

இக் கையெழுத்து மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் போராட்டத்தில் யாழ் மருதனார்மடம் வர்தகர்கள் சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *