தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக விஜய் மீது போலீசில் புகார்!

திருச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த, தி.மு.க., ஐ.டி., அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முரளி கிருஷ்ணன், திருச்சி சைபர் க்ரைம் போலீசில் அளித்த புகார்:

த.வெ.க., தலைவர் விஜய், கடந்த, 20ம் தேதி, நாகை, திருவாரூரில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து உண்மைக்கு புறம்பாக அவதுாறாகவும், ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார்.

இது குறித்து, மணப்பாறை போலீசில் புகார் அளித்தேன்.

அவர்கள் புகாரை ஏற்கவில்லை. எனவே, சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கின்றேன். உரிய விசாரணை நடத்தி, விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *