கொழும்பில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் வயதான தம்பதியினர் காயம்!

இலங்கை, கொழும்பு.

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத இருவர், அங்கிருந்த வயோதிப தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (09.09.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

68 வயதுடைய வயோதிப தம்பதியே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த வயோதிப பெண்ணுக்கும் வெளிநாட்டில் உள்ள அவரது சகோதரிக்கும் இடையில் உள்ள காணி தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *