
12.03.2025 – இலங்கை
இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை பிரச்சினை குறித்து தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை கவலை வெளியிட்டுள்ளது.
சட்ட விரோதமான பொருட்களுக்கு மாற்றாக சுமார் 150 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பாவனை அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் இந்திக்க வன்னிநாயக்க தெரிவித்தார்.
புற்றுநோயாளிகள் மற்றும் பிற மருத்துவ நிலைமைகளுக்கு பரிந்துரைக்கப்படும் வலி நிவாரணிகள் உட்பட இந்த மருந்துகள் போதைக்கு அடிமையானவர்களால் அதிகளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், குறிப்பாக 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு பலியாகி வருவதால், போதைப்பொருள் நெருக்கடி பெரியவர்களுக்கு மட்டும் அல்ல என டாக்டர் வன்னிநாயக்க மேலும் வலியுறுத்தினார்.
2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 162,000 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2019 இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், நாட்டில் 92,000 முதல் 100,000 வரை போதைப்பொருள் அடிமைகள் இருப்பதாகவும், 350,000 நபர்கள் ஹெராயினுக்கு அடிமையானவர்கள் என்றும் மேலும் 350,000 பேர் கஞ்சாவிற்கு அடிமையானவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், போதைப்பொருள் பாவனை தொடர்பில் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை இந்த வருட இறுதியில் புதிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு தயாராகி வருவதாக வைத்தியர் வன்னிநாயக்க தெரிவித்தார்.
பகிரவும்: