
18.03.2025 – ஜெருசலேம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் 330 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதால், இறந்தவர்களில் பலர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு இஸ்ரேல், டிரம்ப் நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். சிரியா, லெபனான் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: மீண்டும் போர் துவங்கி உள்ளது. பிணைக் கைதிகளை விடுவிக்க மறுப்பது மற்றும் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஹமாஸ் படையினர் ஈடுபட்டதால் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளேன்.
பிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த விதிமுறைகளை மீறி உள்ளது. கூடுதல் ராணுவப் படைகளுடன் ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் போராடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பகிரவும்: