
02.04.2025 – பெங்களூரு
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 14வது போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின. சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய பெங்களூரு அணியின். விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பெங்களூரு அணி, 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. தொடர்ந்து, 12 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் பட்டிதார் ஆட்டமிழந்தார். ஜிதேஷ் ஷர்மா (34), லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்து அணியை மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீட்டனர். ஜிதேஷ் ஷர்மா (34), லிவிங்ஸ்டன் (54), டிம் டேவிட் (30 நாட் அவுட்) ஆகியோரின் இறுதிகட்ட பங்களிப்பால், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை குவித்தது.
குஜராத் அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுக்களும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுக்களும், அர்ஷத் கான், இஷாந்த் ஷர்மா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
170 ரன்கள் வெற்றி இலக்காக களம் இறங்கிய குஜராத் அணியில் சாய் சுதர்சன் 48 ரன்களிலும், சுப்மன்கில் 14ரன்களி்லும், ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஜாஸ்பட்லர் அதிரடியாக ஆடி 73 ரன்களும், சர்பான் ரூதர்போர்ட் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 17.5 ஒவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
பகிரவும்: