Amizhthu
Cluster Missiles, Drone Swarms, and Superpower Tensions Reshape the Middle East
A New Phase of War: Iran’s Massive Missile Barrage on Tel Aviv
The Middle East has entered one of its most volatile and dangerous moments in modern history. On March 6, 2026, Iran launched a new wave of missile strikes targeting Tel Aviv, marking a dramatic escalation in the ongoing conflict with Israel and the United States.
According to reports from Israeli broadcaster Channel 12, explosions were heard across multiple parts of Tel Aviv while missile fragments rained down across the metropolitan region. Fires broke out in several areas as emergency services struggled to control the damage.
Iranian military sources stated that the attack formed part of the 21st operational wave of “Operation True Promise 4”, a large-scale military campaign led by the Islamic Revolutionary Guard Corps (IRGC) Aerospace Force.
Iran claims the attacks were retaliatory strikes following a U.S.–Israeli military campaign, which Tehran alleges killed hundreds of Iranian citizens, including Iran’s Supreme Leader Ali Khamenei.
The First Use of Cluster Warheads in the Conflict
One of the most alarming aspects of the latest Iranian strike was the reported deployment of cluster-armed Khayber ballistic missiles.
Cluster warheads are particularly dangerous because:
• They fragment in mid-air
• Release dozens of high-velocity submunitions
• Cover wide geographic areas
• Overwhelm missile defense systems
Defense analysts say this type of weapon is specifically designed to saturate Israel’s defensive shield, including:
• Iron Dome
• David’s Sling
• Arrow missile defense systems
By dispersing multiple explosive fragments across the sky, these weapons significantly increase the probability of penetrating defensive interceptors.
Operation “True Promise 4”: Iran’s Massive Drone–Missile Campaign
Iranian officials claim that since February 28, 2026, their forces have launched:
• More than 2,000 drones
• Approximately 600 ballistic and cruise missiles
This coordinated campaign represents one of the largest missile-drone offensives ever launched by a single nation.
Military strategists describe the attacks as a “swarm warfare strategy.”
The objective is simple:
• Launch massive numbers of drones first
• Force missile defense systems to expend interceptors
• Follow with ballistic missiles and advanced warheads
This layered strategy attempts to overload Israel’s multi-layered defense architecture.
Satellite Evidence: U.S. Missile Defense Infrastructure Hit
Satellite imagery has revealed another critical development: Iranian strikes targeting U.S. missile defense infrastructure across the region.
Images suggest that a major strike may have damaged the AN/TPY-2 radar system, the core detection unit for the THAAD missile defense system, at Muwaffaq Salti Air Base.
Defense analysts describe this radar as the “heart of the THAAD battery.”
Without the radar:
• Missile detection becomes limited
• Interceptors cannot track incoming targets accurately
• Early-warning capability is weakened
Additional satellite evidence suggests impacts at:
• Ali Al-Salem Air Base
• radar facilities in the United Arab Emirates
If confirmed, this would represent a major strategic blow to U.S. regional missile defense networks.
Naval War Expands: U.S. Sinks Iranian Warship
In another dramatic escalation, a U.S. submarine torpedoed and sank the Iranian naval vessel IRIS Dena in the Indian Ocean near Sri Lanka on March 4, 2026.
The warship was reportedly returning from the 2026 International Fleet Review in India when the attack occurred.
Key details include:
• 130 sailors on board
• At least 80 confirmed deaths
U.S. Defense Secretary Pete Hegseth confirmed that the strike marked the first time since World War II that the United States has used a torpedo to sink an enemy warship.
Iran condemned the attack as an “atrocity at sea.”
Diplomatic Collapse: Iran Accuses Trump of “Destroying Diplomacy”
Iranian Foreign Minister Abbas Araghchi sharply criticized U.S. President Donald Trump, accusing Washington of abandoning diplomacy.
According to Tehran:
• Nuclear negotiations were progressing
• Talks were mediated by Oman
• Diplomatic frameworks were near agreement
Iran claims the United States “bombed the negotiation table” by launching military strikes alongside Israel.
The U.S., however, argues that pre-emptive action was necessary to prevent Iran from acquiring nuclear weapons.
Russia Warns of a Global Nuclear Domino Effect
Russia has entered the diplomatic battlefield with a stark warning.
Russian Foreign Minister Sergey Lavrov warned that the war could trigger a global nuclear proliferation crisis.
According to Moscow:
• Countries may conclude that only nuclear weapons guarantee security
• Regional states could begin developing nuclear arsenals
• The global non-proliferation system may collapse
Lavrov also accused the U.S. and Israel of destroying diplomatic progress that had been taking place in Geneva.
Meanwhile, former Russian President Dmitry Medvedev harshly criticized the North Atlantic Treaty Organization (NATO), claiming the alliance is dangerously considering invoking Article 5, which could dramatically expand the war.
Economic Shockwaves Across the Gulf
The war is already producing massive economic repercussions across the Middle East.
Governments in Saudi Arabia, the United Arab Emirates, Kuwait, and Qatar are reportedly reviewing billions of dollars in global investments.
Key concerns include:
• Rising defense expenditures
• Shipping disruptions in the Strait of Hormuz
• Energy supply uncertainty
• Regional instability
Analysts warn that Gulf states may invoke force majeure clauses in international contracts to redirect funds toward military and domestic security spending.
Regional War Expanding Beyond Israel
The conflict is no longer limited to Israel.
Reports indicate strikes or missile interceptions across several countries:
• Bahrain — missile strikes hit civilian structures in Manama
• Saudi Arabia — missiles intercepted near Prince Sultan Air Base
• Kuwait — projectiles detected entering airspace
U.S. forces claim they have already:
• Destroyed over 30 Iranian naval vessels
• Targeted Iran’s ballistic missile production infrastructure
Washington says the goal is to eliminate Iran’s ability to rebuild its missile arsenal.
The Strategic Turning Point: A War That Could Reshape the World
The Iran–Israel confrontation has now evolved into a multi-front geopolitical crisis involving major global powers.
Several dangerous scenarios are now possible:
• Regional war across the Middle East
• confrontation between the United States and Iran
• Involvement of NATO forces
• Expansion into a global proxy conflict involving Russia and China
The most alarming risk remains the potential collapse of the international nuclear non-proliferation system.
If nations conclude that nuclear weapons are the only effective deterrent, the world could face a new era of nuclear arms races across multiple regions.
Conclusion: The World Stands at a Dangerous Crossroads
The events unfolding in March 2026 signal a historic geopolitical turning point.
Iran’s massive missile campaign, the destruction of key defense infrastructure, naval warfare in the Indian Ocean, and the collapse of nuclear negotiations have collectively pushed the Middle East toward a dangerous new phase of conflict.
Whether this crisis evolves into a regional war, a superpower confrontation, or a negotiated settlement will shape the future of global security for decades to come.
For now, the world watches anxiously as the conflict continues to escalate, with potential consequences reaching far beyond the Middle East.

Written by Eelaththu Nilavan
Tamil National Historian | Analyst of Global Politics, Economics, Intelligence & Military Affairs
07/03/2026
The views expressed in this article are the author’s own and do not necessarily reflect Amizhthu’s editorial stance.
அகவை வாழ்த்து மார்ச் 07 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை தருமன்
முருகையா ஜெயமுகுந்தன்
உப்புவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 27.10.1987
வீரவேங்கை குலம்
மார்க்கண்டு வித்தியானந்தன்
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.11.1987
2ம் லெப்டினன்ட் ஜெயந்தன்
பிலிப்பு பிரான்சிஸ்
நாவற்குளம்
மன்னார்
வீரச்சாவு: 10.10.1988
வீரவேங்கை செந்தில்
முருகேசு டொமினிக்
4ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.05.1989
கப்டன் சுசீலன்
சந்தியோகு நாகராசா (மோகன்)
தட்சிணாமருதமடு, மடுக்கோயில்
மன்னார்
வீரச்சாவு: 30.07.1989
கப்டன் ரஜனி
சின்னத்தம்பி புஸ்பராஜா
கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 01.08.1989
வீரவேங்கை புனிதன்
பியசேன விஜயன்
குருக்களூர்
வவுனியா
வீரச்சாவு: 30.03.1991
வீரவேங்கை நிசாந்தன்
அருளானந்தம் யூட்அன்ரனி
நெடுந்தீவு மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை சுதா
பாலேந்திரன் ரஜனி
புன்னாலைக்கட்டுவன் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1991
வீரவேங்கை உடையப்பன்
நா. சதானந்தன்
பல்லவராயன்கட்டு
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.1991
வீரவேங்கை ஞானி
இராசரத்தினம் வைகுந்தன்
அல்வாய் கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1992
வீரவேங்கை நல்லையா
தேவராசா விஜயரஞ்சன்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1992
வீரவேங்கை உலகநம்பி
அடைக்கலம் விமலன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
2ம் லெப்டினன்ட் வேங்கை
வல்லிபுரம் விவேகானந்தன்
ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 22.10.1992
லெப்டினன்ட் ரட்ணம் (ரெட்னேஸ்)
சிறிதரன் உமாச்சந்திரன்
மடு வீதி
மன்னார்
வீரச்சாவு: 17.08.1993
லெப்டினன்ட் புனிதன் (சுவர்ணன்)
சுப்பிரமணியம் சூரியகுமார்
திமிலதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.05.1995
லெப்டினன்ட் இளவரசு
அருளப்பு தேவரஞ்சன்
கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995
2ம் லெப்டினன்ட் உதயகாந்தன் (சுபாஸ்)
ஆனந்தன் விஜயகுமார்
ஊறணி, பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 25.11.1995
2ம் லெப்டினன்ட் ரூபன் (துரைசிங்கம்)
கோவிந்தசாமி விஜயராஜ்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 04.03.1996
வீரவேங்கை தனுகீதன்
தங்கத்துரை சிவபாதம்
காந்திபுரம், பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.11.1996
2ம் லெப்டினன்ட் கதிர்காமத்தம்பி
பாக்கியராசா சிவராஜ்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 09.01.1997
2ம் லெப்டினன்ட் சுகதீஸ்
தெய்வநாயகம் குபேந்திரன்
4ம் குறிச்சி, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.03.1997
லெப்டினன்ட் கோணலிங்கம் (அரியன்)
சத்தியசீலன் காண்டீபன்
களுதாவளை, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.06.1997
வீரவேங்கை குகதீஸ்
சேதுகாவலப்பிள்ளை குமரன்
சொருவில், மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 21.07.1997
மேஜர் சர்மிலன் (ஜுட்)
சந்திரசேகரம் சதீஸ்குமார்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1997
வீரவேங்கை ஊரெழிலன்
கணபதிப்பிள்ளை செல்வக்குமார்
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.12.1997
கப்டன் தில்லையழகன் (வினோ)
பாலசிங்கம் நவரத்தினசிங்கம்
1ம் படிவம், முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.02.1998
2ம் லெப்டினன்ட் சிவகணேஸ்
தில்லையம்பலம் யோகராசா
7ம் வட்டாரம், துறைநீலாவணை, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 08.02.1998
கப்டன் ஒப்பிலாமணி
அன்ரனி நீக்கிளாஸ் அன்ரனி நெல்சன்
நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.1998
மேஜர் புலியூர்மைந்தன்
சிறிஸ்கந்தராசா சதீஸ்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1998
2ம் லெப்டினன்ட் மதிமுகன்
கந்தையா கமல்ராஜ்
பட்டிச்சோலை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1998
2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன்
பாலன் ரவிச்சந்திரன்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.08.1998
வீரவேங்கை மதுரா (ஆசைமயில்)
சீனித்தம்பி பூங்கௌரி
இமையாணன், உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் உசா
திருச்செல்வம் நிரோயினி
இராமநாதன் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
2ம் லெப்டினன்ட் அன்பழகி
சண்முககேசரம்பிள்ளை யாழினி
சூரிபுரம், வற்றாப்பளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
வீரவேங்கை அருள்விழி
வில்வரட்ணம் சாந்தா
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999
2ம் லெப்டினன்ட் எழிற்கோவன்
செல்லப்பா செந்தில்வேல்
கல்முனை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.11.1999
2ம் லெப்டினன்ட் சமர்
சின்னையா சாந்தா
பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.11.1999
வீரவேங்கை மகிந்தன்
வல்லிபுரம் மகிந்தன்
புலுமச்சிநாதகுளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.12.1999
2ம் லெப்டினன்ட் சோழப்பிரியன்
வன்னியசிங்கம் ரஞ்சன்
பன்குடாவெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
வீரவேங்கை தமிழ்க்கொடி
செல்லையா புனிதவதி
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
லெப்டினன்ட் மனோ
வேலுச்சாமி புவனேஸ்வரி
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.2000
மேஜர் தமிழ்ச்செல்வி
இராசையா யாழினிதேவி
அச்செழு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.11.2000
யோகா
கேசப்போடி யோகராசா
கோணாவில், அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 15.04.1985
தருமன்
செம்பாப்போடி தர்மலிங்கம்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 18.11.1986
மாவீரர் முதுமாறன்
செல்லையா விநாயகமூர்த்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.05.2009
பிரிகேடியர் ஜெயம்
மன்னார்
வீரச்சாவு: 18.05.2009
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
நினைவு வணக்கம் | மார்ச் 07 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
மேஜர் எழில்வாணி
இராசேந்திரம் சுபாஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2009
கப்டன் மலர்மகள் (மலரவள்)
ஆரோக்கியம் டிலானி
மன்னார்
வீரச்சாவு: 07.03.2009
வீரவேங்கை கார்மேகன்
சிவசுப்பிரமணியம் விமலதாசன்
பளையகமம், முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2009
வீரவேங்கை சமர்வீரன்
கந்தசாமி காளிதாசன்
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2009
வீரவேங்கை அரசெழியன்
யோகநாதன் விஜிதரன்
1ம் வட்டாரம், வேணாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2009
வீரவேங்கை வசீகரன்
சுந்தரலிங்கம் சுதாகரன்
பல்லவராயன்கட்டு, ஜெயபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2009
வீரவேங்கை தூயவன்
வசந்தகுமார் சயந்தன்
முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2009
வீரவேங்கை புலித்தேவன்
யோலாட்பிள்ளை அன்ரனிலாட் பிரதாஸ்
புலோப்பளை மேற்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2009
வீரவேங்கை அன்புமாறன்
ரவீந்திரன் துஜிந்தன்
வள்ளுவர்புரம், விசுமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2009
மேஜர் கவியன்பன்
சத்தியசீலன் சுதர்சன்
பரந்தன் வீதி, தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2009
லெப். கேணல் முல்லைநிலா
இராசு சங்கீதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008
கப்டன் அறிவுமலர்
கனகராசா கருணா
வவுனியா
வீரச்சாவு: 07.03.2008
கப்டன் கதிர்
இராசையா இராஜரூபி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008
மேஜர் அகச்சுடர்
மனோகரன் லோகேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008
லெப்டினன்ட் இனியவன்
திருச்செல்வம் குகப்பிரிதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2008
லெப்டினன்ட் செந்தமிழ்
அன்ரன்மயில்வாகனம் றஜீபனா
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2008
லெப்டினன்ட் தமிழ்க்கவி
செல்வநாயகம் அகிலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008
லெப்டினன்ட் தனிவரசன்
பாலசிங்கம் பானுசன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2008
லெப்டினன்ட் பாவேந்தி
பாஸ்கரன் பரிசுலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008
லெப்டினன்ட் திரு
நாகநாதம்பிள்ளை குகன்
திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2008
லெப்டினன்ட் கடலூரான்
பொன்னுத்துரை சுமேதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2008
லெப்டினன்ட் தமிழ்ப்பரியா
குணரெட்ணம் யாழினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2008
2ம் லெப்டினன்ட் புனிதா
குணசிங்கம் நதியா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2008
2ம் லெப்டினன்ட் தேன்சுரபி
நடராசா சசிகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008
2ம் லெப்டினன்ட் ஆதவி
சீவரத்தினம் சாருகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2008
2ம் லெப்டினன்ட் பிறையினி
மரியநாயகம் மரியதிரேசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2008
2ம் லெப்டினன்ட் மைவாணி
ஜோன்சன்பெனடிற் மேரிகனிஸ்டா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008
வீரவேங்கை புகழ்வாணி
இராமையா சித்திரா
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2008
லெப்டினன்ட் ரவி
தங்கராசா ரவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.03.2007
2ம் லெப்டினன்ட் தோம்சன்
பரசுராமன் கிருபாகரன்
பூவல், மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.03.2000
மேஜர் தவநாதன்
சண்முகம் புவனேந்திரன்
ஆண்டான்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2000
மேஜர் குமரச்செல்வன் (ராகுலன்)
சீவரட்ணம் அன்பழகன்
7ம் வட்டாரம், கட்டைபறிச்சான்
திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2000
மேஜர் அறிவுமங்கை
வில்வராஜா ரட்ணகாந்தி
கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2000
மேஜர் கிளிமொழி
கனகரத்தினம் தர்சகுமாரி
ஒட்டுவெளி, எழுதுமட்டுவாள், மிருசுவில் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000
கப்டன் ரஞ்சிதன்
சிறிஸ்தாசன் ரஞ்சித்ராஜ்
நறுவிலிக்குளம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 07.03.2000
கப்டன் சுபநிலா
கதிரவேல் தயாநிதி
பருத்தியடைப்பு, ஊர்காவத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000
கப்டன் இருண்மொழி (அருள்மொழி)
கந்தையா சுரேந்திரன்
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2000
கப்டன் பருதி (கருணை)
அந்தோனி கெனடிகிறேஸ்
பெரியபண்டிவிரிசசான், மடுக்கோவில்
மன்னார்
வீரச்சாவு: 07.03.2000
லெப்டினன்ட் திலாந்தன்
வேலாயுதம் கரிகரன்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000
லெப்டினன்ட் செங்கண்ணன் (ஊரவன்)
பேரின்பநாதன் இருதயராஜ்
பலாலி வடக்கு, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000
2ம் லெப்டினன்ட் கலைத்தங்கன்
ஞானப்பிரகாசம் ஜெயக்குமார்
புலோப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2000
வீரவேங்கை கேசவன்
கந்தசாமி தனபாலசிங்கம்
சொருவில், மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 07.03.2000
2ம் லெப்டினன்ட் சிங்கன்
கோபாலப்பிள்ளை ஆனந்தராசா
சின்னவத்தை, துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 07.03.1999
கப்டன் நாவேந்தன்
எட்வேட்ரவீந்திரன் டொனால்ட்ராஜேந்திரன்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1998
2ம் லெப்டினன்ட் நந்தன்
லோகேந்திரம் தவலிங்கம்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1998
கப்டன் வரோதயன்
சிவலிங்கம் குணசீலன்
சித்தன்கேணி, வட்டுக்கோட்டை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1998
வீரவேங்கை ஈசன்
செல்வராசா சிவநேசன்
தனங்கிளப்பு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1993
வீரவேங்கை அகிலன்
வீரச்சாவு: 07.03.1991
வீரவேங்கை காராளசிங்கம்
முருகேசு யோகராசா
சங்கத்தார்வயல், இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.1991
வீரவேங்கை மௌலி
தம்பிராசா தங்கேஸ்வரன்
வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.03.1991
மேஜர் காண்டீபன்
மகாலிங்கம் காண்டீபன்
கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.1990
வீரவேங்கை துஸ்யந்தன்
தங்கவேலாயுதம் ஜெயக்குமார்
பொலிகண்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1989
பரந்தாமன்
சுப்பிரமணியம் பரந்தாமன்
அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1989
வீரவேங்கை அசோக்
தம்பியப்பா சித்திரவேல்
தாண்டியடி, திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 07.03.1987
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
| தமிழ் நாட்காட்டி மார்ச் 2026 | |
|---|---|
| அமாவாசை | 18-மார்ச்-2026 புதன்கிழமை |
| பௌர்ணமி | 03-மார்ச்-2026 செவ்வாய்கிழமை |
| கார்த்திகை | 23-மார்ச்-2026 திங்கட்கிழமை |
| சஷ்டி விரதம் | 24-மார்ச்-2026 செவ்வாய்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | 06-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை |
| சதுர்த்தி | 22-மார்ச்-2026 ஞாயிறு |
| பிரதோஷம் | 01-மார்ச்-2026 ஞாயிறு 16-மார்ச்-2026 திங்கட்கிழமை 30-மார்ச்-2026 திங்கட்கிழமை |
| திருவோணம் | 15-மார்ச்-2026 ஞாயிறு |
| மாத சிவராத்திரி | 17-மார்ச்-2026 செவ்வாய்கிழமை |
| ஏகாதசி | 5-மார்ச்-2026 ஞாயிறு 29-மார்ச்-2026 ஞாயிறு |
| அஷ்டமி | 11-மார்ச்-2026 புதன் 26-மார்ச்-2026 வியாழன் |
| நவமி | 12-மார்ச்-2026 வியாழன் 27-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | 19-மார்ச்-2026 வியாழன் உகாதி தெலுங்கு வருடப் பிறப்பு 21-மார்ச்-2026 சனிக்கிழமை ரமலான் பண்டிகை 31-மார்ச்-2026 செவ்வாய் மஹாவீர் ஜெயந்தி |
| திருமண நாட்கள் | 05-மார்ச்-2026 வியாழன் தேய்பிறை 06-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை தேய்பிறை 08-மார்ச்-2026 ஞாயிறு தேய்பிறை 15-மார்ச்-2026 ஞாயிறு தேய்பிறை தேய்பிறை 16-மார்ச்-2026 திங்கட்கிழமை தேய்பிறை தேய்பிறை 25-மார்ச்-2026 புதன்கிழமை வளர்பிறை |
| திருவிழாக்கள் | 02-மார்ச்-2026 திங்கட்கிழமை மாசிமகம் 03-மார்ச்-2026 செவ்வாய் ஹோலிப் பண்டிகை 14-மார்ச்-2026 சனிக்கிழமை காரடையான் நோன்பு 19-மார்ச்-2026 வியாழன் உகாதி தெலுங்கு வருடப் பிறப்பு 27-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை ஸ்ரீ ராமநவமி |
இன்றைய ராசி பலன் 07 மார்ச் 2026 சனி
மேஷ ராசி அன்பர்களே,
எதிர்கால நலன் கருதி சேமிப்பில் ஈடுபடவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷப ராசி நேயர்களே,
நல்ல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். பிடிவாதப் போக்கை தளர்த்திக் கொள்ளவும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
மிதுன ராசி அன்பர்களே,
மனதில் எழும் சந்தேகங்களுக்கு நல்லதொரு தீர்வு வரும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கடக ராசி நேயர்களே,
எடுத்த சவாலில் ஜெயிக்க முடியும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
சிம்ம ராசி நேயர்களே,
குடும்பத்தில் இருந்த பழைய சிக்கல்கள் தீரும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கன்னி ராசி நேயர்களே,
வசீகர பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். புது நண்பர்கள் உதவி கரம் நீட்டுவர். பெற்றோரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
துலாம் ராசி நேயர்களே,
தெய்வ அருளால் நினைத்த காரியம் நடக்கும். சொந்த பந்தங்கள் கை கொடுத்து உதவுவர். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே,
முகம் மற்றும் தோற்ற பொலிவு கூடும். பிரியமானவர்களின் அன்பும், பாசமும் கிடைக்கும். எதிர்பாலினத்தாருடன் சற்று கவனமாக பழகவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
தனுசு ராசி நேயர்களே,
மன கவலை நீங்கி உற்சாகம் பிறக்கும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். எதிரிகளின் பலம், பலவீனம் அறிந்து செயல்படவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மகர ராசி நேயர்களே,
குடும்பத்தில் பொறுப்புகள் கூடும். நண்பர்களிடத்தில் இருந்த பகைமை மாறும். கணவன் மனைவிக்குள் இருந்த மனவருத்தம் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கும்ப ராசி நேயர்களே,
புது காரியங்களில் திட்டமிடல் அவசியம். உற்றார், உறவினர்களால் சில நன்மைகள் உண்டு. தவிர்க்க முடியாத செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
மீன ராசி நேயர்களே,
புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் வரும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 02-03-2026 To 08-03-2026

மேஷ ராசி அன்பர்களே,
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிக்க முடியும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். புதிய முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் கடமைகளை சரிவர செய்யவும். குடும்ப சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். தடைபட்டு வந்த காரியம் விரைவில் நடந்து முடியும். குடும்ப வருமானம் சற்று குறைவாகவே இருக்கும், அதற்காக கவலைப்பட்டு மற்ற விஷயங்களில் கோட்டை விட வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகமாகும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்ப விஷயங்களை கையாளுவதில் கவனம் தேவை. உத்யோக மாற்றம் தொடர்பான எந்த சிந்தனையும் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே,
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, எங்கும், எதிலும் கவனமாக இருப்பது நல்லது. முக்கிய காரியங்களில் தடை வந்தாலும், இறுதியில் வெற்றிகரமாக முடிக்க முடியும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. குடும்பத்திற்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களின் பேச்சைக் ஒரு அளவோடு எடுத்துக்கொண்டு செயல்படவும். குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். பண வரவு வெளியில் சொல்லும்படி இருக்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நண்பர்களிடம் எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். பயணத்தில் மிகுந்த கவனம் தேவை. குடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டு திறமையாக செயல்படுத்த முடியும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும்

மிதுன ராசி அன்பர்களே,
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை காணப்படும். நினைத்த காரியம் எதுவானாலும் கைகூடும். உறவுகளில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.எந்த ஒரு வேலையைச் செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. உடல் சோர்வு ஏற்படும். நண்பர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மற்றவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். கணவன் மனைவிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. மனம் வருந்துபடியான விஷயம் ஏதேனும் இருந்தால் மறந்துவிடுவது நல்லது. உத்யோகத்தில் பணிவு அவசியம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும்

கடக ராசி அன்பர்களே,
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். பணவரவு அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வருமானமும் குறைவாகவே இருக்கும், இருப்பினும் பெரிதாக கவலைப்பட ஒன்றும் இல்லை. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். பண பிரச்சனை ஓரளவு தீரும். உடல் நிலையில் கவனம் தேவை. தேவையில்லாத செலவுகளில் ஈடுபட வேண்டாம். புதிய முயற்சிகள் எதையும் இப்போதைக்கு மேற்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். புது தொழில் யோகம் உண்டு.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே,
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம். யோசிக்காமல் எடுக்கும் ஒரு சில முடிவுகளால் வீண் பிரச்சனைகள் வரக்கூடும். கணவன், மனைவிக்கிடையே சில கசப்பான விஷயங்கள் நடக்கும். உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத் தரும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். குடும்பத்தில் பண தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : சூரிய பகவானை தினமும் வழிபடவும்

கன்னி ராசி அன்பர்களே,
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, நீங்கள் எதிர்பார்த்தது போலவே பொருள் வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். புது நட்பு வட்டாரம் உருவாகும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை கூட தைரியமாக எடுத்து செய்ய முடியும். குடும்பத்தில் சண்டை, சண்டைகள் தவிர்க்கவும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வெளி உணவுகளை கூடுமானவரை தவிர்க்கவும்.குடும்பத்தில் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெண்கள் வகையில் சில நன்மைகள் உண்டு. வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். எதிரிகளின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து செயல்படவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் சிறப்படையும்.
பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே,
துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம் பலன் படி, குடும்பத்தில் வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். பொருளாதாரம் பற்றிய கவலைகள் வேண்டாம் சிறப்பாக உள்ளது. வரவு செலவு கணக்குகள் கட்டுப்பாட்டில் இருக்கும். நண்பர்ககளுடன் சின்ன மனவருத்தம் உண்டாகலாம், இருப்பினும் நாளடைவில் சரியாகும். உற்றார், உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்ப பெரியோர்கள் சொல்படி கேட்டு நடப்பது நல்லது. கடுமையான உழைப்புக்கு தக்க சன்மானம் கிடைக்கம். பல நல்ல செயல்களால் சமூக அந்தஸ்து கூடும். உறவினர்களின் பாசம் நெகிழ்ச்சி தரும். கடன் பிரச்னை தீரும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்க தாமதம் ஆகலாம், மனம் தளர வேண்டாம். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே,
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, குடும்ப நிதி நிலைமை சீரடையும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் பழக்கம் உண்டாகும். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். தடைப்பட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த தொந்தரவும் இருக்காது. வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. குடும்பத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். வாகன யோகம் உண்டு. பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். குடும்பத்தை பற்றிய கவலைகள் அடிக்கடி வரும். உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே,
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் பல வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரியமானவர்களிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதிலும் தீவிரமாக யோசித்து நிதானமாக செயல்படக்கூடியவர். மறைமுக எதிரிகள் பலம் குறையும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
பரிகாரம் : நவக்கிரகத்தை தினமும் வழிபடவும்.

மகர ராசி அன்பர்களே,
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். வாக்கு சாதுரியம் ஏற்படும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிறைய நன்மைகள் வந்து சேரும். புது வீடு, மனை வாங்கும் எண்ணம் இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடிக்கவும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நல்லது. வீண் விவாதங்களை தவிர்க்கவும். உடல் உபாதைகள் நீங்கும். கொடுக்கல், வாங்கலில் உஷாராக இருக்கவும். இரவு நேர வாகன பயணங்களில் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்

கும்பம் ராசி அன்பர்களே,
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன்படி, பிரபல நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். குடும்பத்தில் சற்றும் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். மனதில் துணிச்சல், தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செய்ய நினைக்கும் காரியம் அனைத்தும் வெற்றி பெரும். எதிர்ப்புகள் தானாக விலகும். மனதில் பட்டதை எப்போதும் ஒளிவு மறைவின்றி பேசவும். வேண்டியவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கூடும். உடல் நலனில் அக்கறைகொள்ளவும். கடன் தொல்லைகள் மனதை வாட்டும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் வேலைபளு கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே,
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் தேவையான பொருட்களை வாங்க முடியும். பண வரவு ஒரு சில தடங்கலுக்கு பின் கைக்கு வரும். வீண் செலவுகள் படிப்படியாக குறையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் முற்றிலும் நீங்கும். புதிதாக செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. ஆன்மீக பெரியோர்களின் ஆசி கிட்டும். வேண்டாத நபர்களால் மனசங்கடம் உண்டாகும். வாங்கிய கடனை அடைத்துவிட முடியும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமணம் காரியம் விரைவில் கைகூடும். குடும்ப விஷயத்துக்காக நிறைய அலைச்சல் இருக்கும், உடல் சோர்வு ஏற்படும், கவலை வேண்டாம். சமூகத்தில் ஓர் உயந்த அந்தஸ்தை பெற முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். .
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்
மார்ச் மாத ராசி பலன்கள் 2026
| மார்ச் மாத ராசி பலன்கள் 2026 |
| (2026) – மார்ச் மாத ராசி பலன்கள் விசுவாவசு வருடம் மாசி மாதம் 17ம் தேதி முதல் பங்குனி மாதம் 17ம் தேதி வரை (01-03-2026 – 31-03-2026) வாக்கிய பஞ்சாங்கப்படி 01-03-2026 முதல் 31-03-2026 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் திசை, புத்தி, அந்தரம் மற்றும் கோச்சாரம் கணக்கிட்டு பார்க்கும் போது ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும், இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை. மார்ச் மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு : 06.03.2026- மீன சனி 15.03.2026 – மீன சூரியன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் A.வினோத் குமார் (Ph.d Astrology) |
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் உண்டு. நீண்ட நாள் எண்ணங்கள், திட்டங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். மன சங்கடங்கள் நாளடைவில் தீரும். பல முக்கிய சவால்களையும், விவாதங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எப்போதும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர்களிடம் சின்ன சின்ன சின்ன மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரிய செலவுகள் அதிமாகும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது எல்லா வகையிலும் சிறப்பு. உடல் உபாதைகள் நீங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிரபலங்களின் அறிமுகவும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். புது முயற்சிகளை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் தொடங்க முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 9,10,11 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு வெகுவாக உயரும். இனிமையான பேச்சின் மூலம் பலரது ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதாமல் வெளியில் கைமாற்ற பணம் வாங்க வேண்டியிருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் கூட சீக்கிரத்தில் முடிவடையும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். குடுமபத்தில் புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோசனையை சற்று தள்ளி வைப்பது நல்லது. பெற்றோர்களின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் ஏற்படும். பல நாட்களாக திட்டமிட்டு இருந்த தெய்வ வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ளவும். உடல் நலத்தை பொறுத்தவரை எந்த தொந்தரவும் இருக்காது. உங்கள் முக்கிய காரியங்கள் நாளடைவில் நிறைவேறும். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 11,12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் வரும் இன்னல்களை சமாளிக்க முடியும். எதிர்பார்க்கும் காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். மனம் மகிழ்ச்சியில் துள்ளும். போதிய வருமானம் தங்கு தடையின்றி கிடைக்கும். உங்களது அன்றாட பணிகளை காலம் தாழ்த்தாமல் செய்யவும். மனம் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். தெய்வ காரியங்களில் நாட்டம் உண்டாகும். குடும்பத்தினருடன் சென்று பிராத்தனையை செய்யவும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வேண்டியவர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப வர தாமதமாகும். வெளியில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிரியமானவர்கள் வழியில் சில அனுகூலமான பலன் உண்டு. நண்பர்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகவும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். .
சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் எதிர்பார்த்ததும், எதிர்பார்காததும் இரண்டுமே சீக்கிரத்தில் நடந்து முடியும். பல நாட்களாக இழுபறியில் இருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். தெய்வ வழிபாடு மூலம் நல்லது நடக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சில நேரங்களில் திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். நட்பு வழியில் ஆதாயம் உண்டு. சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவும். வீண் வாக்குவாதங்களை முடிந்தவரை தவிர்க்கவும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நல்லது. அடிப்படை தேவைகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். குடியிருக்கும் வீட்டை மாற்ற நேரிடும். பழைய கடனை அடைக்க புது வழி கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய சொந்தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. புது தொழில், யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் பல வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சிரமம் இன்றி சமாளிக்க முடியும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தன்னம்பிக்கையும், மன தைரியம் அதிகரிக்கும். குடும்ப சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. புது நண்பர்கள் அறிமுகமாவர். உற்றார், உறவினர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் வர வாய்ப்புண்டு. புதிய வண்டி, வாகனங்களை வாங்க முடியும். குடும்ப நபர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். கிடைக்க வேண்டிய நல்லது அனைத்தும் ஒவ்வொன்றாக கிடைக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். பல நாட்களாக தடைபட்ட திருமணம் விரைவில் கைகூடும். கடன் சுமைகள் பாதியாக குறையும். உடன்பிறப்பு வகையில் ஆதரவும் கூடும். உங்கள் அன்றாட வரவு செலவு கணக்குகளை தினசரி சரி பார்க்கவும். வெளிநாடு செல்லாதவர்க்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். அடிக்கடி பயணங்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 18,19,20,21 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உங்கள் விருப்பங்களை எதுவாகினும் அது நிறைவேற்ற வழி கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நிறைய சந்தர்ப்பங்கள் வரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். கடன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருப்பதால் அனாவசிய செலவுகளை அறவே தவிர்க்கவும். தூரத்து பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாக்கு சாதுரியம் ஏற்படும். மனக்கவலைகள் அடியோடு மறையும். குடும்பத்தில் முக்கிய விசேஷங்கள் நடக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க பழகவும். தெய்வ வழிபாட்டின் மூலம் பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும்.வாகன யோகம் உண்டு. நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நண்பர்கள் கேட்ட உதவியை செய்து தருவர். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வேண்டாதவர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எடுத்த வேலைகளை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். உத்தியோகத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ, செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். எல்லா விஷயத்திலும் பொறுமையை கடை பிடிக்க வேண்டியது அவசியம். மனதில் ஒரு விதமான குழப்பங்கள் நிலவினாலும் அது நாளடைவில் சரியாகிவிடும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. புது வீடு மாற்றம் ஏற்படும். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிட்டும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்துடன் தூர பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பயணங்கள் தொடர்பாக அலைச்சல், செலவுகள் ஏற்பட்டாலும் மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். புது நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் கிட்டும். பெண்கள் வகையில் சில நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிலும் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து வந்தால் உடல் மேன்மை பெரும். வரும் வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்தி கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். பண வரவு வெளியில் சொல்லும்படி இருக்கும். உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலகி விடும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். அடுத்தவர் செய்ய தயங்கும் காரியத்தை கூட தைரியமாக செய்ய முடியும். மற்றவர்களை கவரும் திறமை உங்களிடம் நிறைவே இருக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவும். ஆன்மீக ஆர்வம் கூடும். கொடுக்கல் வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 27,28,29 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மிகுதியாக இருக்கும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எப்போதும் நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். வீட்டில் அனாவசிய செலவுகளை குறைக்கவும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு நல்ல விதமாக இருக்கும். உங்கள் வித்தியாசமான அணுகுமுறையாலும் சாதுரியமான பேச்சாலும் எதையும் சாதிக்க முடியும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெருக்கிகொள்ள முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். கடன் பிரச்சனைகள் அவ்வபோது தலைதூக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். வாகன யோகம் உண்டு. எப்போதும் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சந்திராஷ்டமம் : 2,3,4 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். மனம் நிம்மதிக்காக தினமும் தியானம் செய்யவும். இழுபறியில் இருந்த வேலைகளை சீக்கிரத்தில் முடிக்க முடியும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத அளவிற்கு செலவுகள் வரும். மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். முடிந்தவரை அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் குதூகலமும் இருக்கும். திருமணம் காரியம் கைகூடும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலர் பூர்விக இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். வாகனங்களில் செல்லும் போது தொலைபேசியை உபயோகிக்க வேண்டாம். கணவன் மனைவிடையே இணக்கமான போக்கும் காணப்படும். நண்பர்களிடம் உங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளவும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். குடும்ப நபர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 4,5,6 & 31 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீண்ட காலமாக திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செய்யவும். எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். சேமிப்பில் கவனம் செலுத்தினால் பல வகையில் நன்மை அடையலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். புது வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டு. குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் நற்செய்தி உண்டு. கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்கள் இருக்கும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். உத்யோகத்தில்அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 6,7,8,9 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
இசைக்குயில் 2026 மற்றும் நெருப்பின் குரல் 2026 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி சுவிஸ்
இசைக்குயில் 2026 மற்றும் நெருப்பின் குரல் 2026 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி சுவிஸ்
IITA அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும் “இசைக்குயில் 2026 மற்றும் நெருப்பின் குரல் 2026” தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி
28.03.2026 – 06.04.2026
காலை 08:00 மணி முதல்
இடம்: MARKTHALLE BURGDORF SÄGEGASSE 19 3400 BURGDORF BE
தொடர்புகளுக்கு: 077 922 03 14
International Institute of Jamil Arts
IITA, Gewerbestrasse 4, 8162 Steinmaur ZH
மேற்குறிப்பிட்ட ஏழு நாட்களிலும் நடைபெறவிருக்கின்ற இசைக்குயில், நெருப்பின் குரல் போட்டி நிகழ்வுகளிற்கு தங்கள் குடும்பத்தினருடன் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

மகளிர் தினம் 2026 சுவிஸ்
“பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.”
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
தமிழீழப் பெண்கள் மீதான சிங்களப் பேரினவாத அரசின் கொடுமைகளை உலகிற்கு உரக்கச் சொல்ல அனைவரையும் அழைக்கின்றோம்.
09.03.2026 திங்கள் | பிற்பகல் 15:30-17:30 மணிவரை
Bahnhofplatz 6003 Luzern
தொடர்புகளுக்கு:
079 364 84 68 / 079 913 27 91 / 079 549 89 21
STCC, Postfach 9630, 3001 Bern/ 079 768 91 25
www.swiss-tcc.ch
info@swiss-tcc.ch
சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு
சுவிஸ் தமிழர் அரசியல் துறை

தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது! – சீமான் எச்சரிக்கை
அறிக்கை: தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது! உடனடியாக அகற்றப்படாவிட்டால் மாபெரும் எல்லை மீட்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்! – சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி

தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற்குட்பட்ட தாலூரில் கேரள மாநில அரசு மலையாள மொழியில் எல்லை அறிவிப்புப் பலகை வைத்ததை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டம் நடத்தி அகற்றிய நிலையில், நேற்று மீண்டும் கேரள அரசு அத்துமீறி அறிவிப்புப் பலகை வைத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அத்துமீறி கேரள அரசு அறிவிப்புப் பலகை வைப்பதை திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, கேரள வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தமிழ்நாட்டின் தாலூர் எல்லைக்குள் 200 மீட்டர் தூரம் அத்துமீறி நுழைந்து, அவ்விடம் வரை தங்களுக்கு சொந்தமானது என்றுகூறி கேரள மாநில அரசு மலையாள மொழியில் அறிவிப்பு பலகையை வைத்தது. தமிழக எல்லையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அப்பலகையை நாம் தமிழர் கட்சியினர் அடித்து உடைத்து அகற்றியதோடு, தமிழ்நாட்டின் எல்லையை காக்கத் தவறிய திமுக அரசை கண்டித்துக் கடும் எதிர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தது.
கேரள அரசு மீண்டும் அகற்றப்பட்ட அறிவிப்பு பலகையை வைக்க முயன்றபோது, நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தால் விழிப்படைந்த தாலூர் மக்களும் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போராடி அதனை வைக்க விடாமல் மண்ணுரிமை மீட்டனர். அதன்பிறகு நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரிகள் அவ்விடத்தை அளந்து, அது கூடலூர் வட்டத்திற்கு உட்பட்ட தமிழகத்தின் எல்லை என்பதை உறுதிப்படுத்தியது. அதனையடுத்து கேரளா தனது ஆக்கிரமிப்பு முயற்சியைக் கைவிட்ட நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு மீண்டும் கேரள அரசு தமிழக எல்லைக்குள் அறிவிப்பு பலகையும் பேருந்து நிலையமும் அமைக்க முயன்றதையும் நாம் தமிழர் கட்சி போராடி தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில், நேற்று மீண்டும் தமிழக எல்லைக்குள் தமிழ்நாடு அரசு தமிழில் வைத்த அறிவிப்பு பலகையை உடைத்து எறிந்துவிட்டு, கேரள அரசு மலையாள அறிவிப்பு பலகையை அத்துமீறி வைத்துள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் நேற்று இரவு முதல் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கேரள மாநில அரசு கேரள காவல்துறையினரை குவித்து, தமிழக எல்லைக்குள் அத்துமீறி நடப்பட்ட அறிவிப்பு பலகையைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு எல்லை பலகையை காக்கத் தவறிய தமிழ்நாடு காவல்துறையோ, எல்லை மீட்புக்காகப் போராடும் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்துகின்றது. தமிழ்நாடு எல்லையைப் பாதுகாக்க திறனற்ற திமுக அரசு போராடும் நாம் தமிழர் கட்சியினரை அடக்கி ஒடுக்குவது ஏன்? இதுதான் திமுக அரசு மண்ணையும், மானத்தையும் காக்கும் முறையா?
முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் ஒரு மரத்தைக்கூட வெட்ட அனுமதிக்காத கேரள மாநில அரசு, எந்தக் காலத்திலும் எவராலும் உருவாக்க முடியாத இயற்கையின் அருங்கொடையான தமிழ்நாட்டின் மலைவளத்தை கனிம வளங்களாக கேரள மாநிலத்திற்கு நாள்தோறும் வெட்டி ஏற்றப்படுவதை திமுக அரசு தடுத்து நிறுத்தாதது ஏன்? கேரளாவிலிருந்து தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்குள் குப்பைகளும், மருத்துவக்கழிவுகளும் கொட்டப்படுவதையும் திமுக அரசால் தடுக்க முடியாதது ஏன்? மின்னிலக்க அளவீடு (டிஜிட்டல் சர்வே) என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு சொந்தமான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை கேரள எல்லைகளாகக் குறிப்பிட்டு அத்துமீறி எல்லைக்கல் நிறுவியபோதும் திமுக அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்தது ஏன்? முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக சென்ற தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதை திமுக அரசு தட்டிக்கேட்காது ஏன்? திமுக கூட்டணி கட்சிகள் ஆளும் கேரள அரசிடம் குறைந்தபட்ச பேச்சு வார்த்தைகூட திமுக அரசு நடத்தாது ஏன்? காங்கிரசிடமும்,

கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தேர்தலில் போட்டியிடும் இடங்களைத் தீர்மானிப்பதற்காக பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி கடும் பேரத்தில் ஈடுபடும் திமுக, அதில் அணுவளவு அக்கறையும் தமிழ்நாட்டின் உரிமையை மீட்கும் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் காட்டாதது ஏன்? இதுதான் தமிழ் மண்ணின் மீதும், மக்களின் மீதும் திமுக அரசு கொண்டுள்ள அக்கறையா?
தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட திராவிடக் கட்சிகளின் கடந்த 60 ஆண்டுகால அவல ஆட்சியில்தான் கண்ணகி கோட்டத்தின் நில உரிமையையும், முல்லைப் பெரியாற்று நீர் உரிமையையும் கேரளாவிடம் தமிழ்நாடு இழந்தது. இன உணர்வும், மான உணர்வும் அற்ற இரு திராவிடக் கட்சிகளின் கையாலாகத்தனத்தின் விளைவே, தற்போது தமிழக எல்லையை தங்கள் எல்லைகளாக குறிப்பிட்டு அத்துமீறி நுழைந்து அறிவிப்புப் பலகை வைக்கும் துணிவை கேரள மாநில அரசிற்குக் கொடுத்துள்ளது. இனியும் திமுக அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியை கேரளாவிற்கு தாரைவார்க்குமானால் அது ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.
ஆகவே, நீலகிரி மாவட்டம் தாலூரில் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்குள் கேரள மாநில அரசு அத்துமீறி வைத்துள்ள எல்லை பலகையை உடனடியாக அகற்றி, உடைத்து எறியப்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பலகையை உடனடியாக நிறுவ வேண்டும். இதுபோன்ற எல்லை தாண்டிய அத்துமீறல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கத் தமிழ்நாடு அரசு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து கேரள அரசிடம் கடும் எதிர்வினை ஆற்றிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
உடனடியாக, கேரள அரசின் அறிவிப்புப்பலகை அகற்றப்படாவிட்டால் கூடலூர் மக்களைத் திரட்டி மாபெரும் எல்லை மீட்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி தாலூர் எல்லையில் முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்.
தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது! உடனடியாக அகற்றப்படாவிட்டால் மாபெரும் எல்லை மீட்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!@CMOTamilnadu @mkstalin
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) March 6, 2026
தமிழ்நாட்டின்… pic.twitter.com/vCEkUK7xjG
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
யாழ்ப்பாணக் கடலில் காணாமல் போன போனோரை தேடும் பணியை சுழியோடிகள் தொடங்கியுள்ளனர்!
யாழில் கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பாலைதீவு திருவிழாவுக்கு ,இன்று வெள்ளிக்கிழமை (06-03-2026) படகு ஒன்றில் பலர் சென்ற நிலையில் குறித்த படகு கவிழிந்துள்ளது.
இந்நிலையில், 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரும் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளனர்.
படகில் பயணித்தோரின் எண்ணிக்கை தெரியவராத நிலையில், கடலில் காணாமல் போனோர் இருக்கலாம் என்ற ரீதியில் சுழியோடிகள் மூலம் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாண படகு விபத்து; அவசர விசாரணைக்கு மீன்வள அமைச்சர் உத்தரவிட்டார்.
யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடமும், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.
கடலில் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மீட்பு நடவடிக்கைகளில் எந்தவித தாமதமும் ஏற்படாத வகையில் அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை அதிகாரிகளுடனும் அமைச்சர் தொடர்புகொண்டு அவர்களின் உடல்நிலை குறித்து
நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராப்பர் பாலேந்திர ஷா வெற்றி பெற்றார்.
நேபாளத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில், ‘ராப்’ இசை பாடகராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திர கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
நேபாளத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 26ல், சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இது, அந்நாட்டு இளைஞர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அரசின் இந்த முடக்கம், ஏற்கனவே அங்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஊழல், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அனுபவிக்கும் சொகுசு வாழ்க்கை ஆகியவற்றுக்கு எதிராக திரும்பியது. அந்நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தாங்களாகவே ஒருங்கிணைந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை கையிலெடுத்தனர்.
தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மைதிகர் மண்டலா என்ற பகுதியில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்தினர். போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினரை அரசு அனுப்பியது. இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, போராட்டம் வன்முறையாக மாறியது.
அரசு கட்டடங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் தீக்கிரையாகின. வன்முறையை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 76 பேர் உயிரிழந்தனர். இளைஞர்களின் எழுச்சியைக் கண்ட பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு பதவியை ராஜினாமா செய்தது. இதையடுத்து, அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
புதிய இடைக்கால அரசு பதவியேற்ற உடன், சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்கியது. இந்நிலையில், அந்நாட்டின் பார்லிமென்ட்டுக்கான பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், நேபாள காங்கிரசைச் சேர்ந்த ஷேர் பஹதுார் துாபா, நேபாள கம்யூ., – மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் தலைவரும் முன்னாள் பிரதமருமான சர்மா ஒலி, நேபாள கம்யூ., – மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் பிரசண்டா ஆகியோர் களம் இறங்கினர்.
அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களை எதிர்த்து, 35 வயதான, ‘ராப்’ இசை பாடகர் பாலேந்திர ஷா, ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்டார்.
ஓட்டுப்பதிவு முடிந்து நேற்று முன்தினம் இரவு துவங்கிய ஓட்டு எண்ணிக்கை, நேற்று முழுதும் தொடர்ந்தது. இதில், பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி., முன்னிலை வகிக்கிறது. நேபாளத்தில் மொத்தமுள்ள 275 தொகுதிகளில், 165 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
மீதமுள்ள, 110 தொகுதிகளுக்கான எம்.பி.,க்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கப்படுவர். நேற்றிரவு நிலவரப்படி, பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி., கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி உள்ளது. 110 இடங்களுக்கு மேல் அவர்கள் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காத்மாண்டுவின் முன்னாள் மேயரான பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, அவரது சொந்த தொகுதியான ஜாப்பா 5ல் பின்னுக்கு தள்ளி பெரும்பான்மை வகிக்கிறார்.
அந்நாட்டின் முக்கிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் 10 இடங்களிலும், சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் 10 இடங்களிலும், பிரசண்டாவின் என்.சி.பி., எனப்படும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி எட்டு இடங்களிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளன.
பாலேந்திர ஷா, நேபாள இளைஞர் புரட்சிக்கு நேரடியாக தலைமை தாங்கவில்லை என்றாலும், காத்மாண்டு மேயராக இருந்த அவர், இளைஞர்களின் போராட்டத்துக்கு தன் முழு ஆதரவை தெரிவித்திருந்தார். இது, இளைஞர்களிடையே அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கை ஏற்படுத்தியது.
