அமிழ்து
www.amizhthu.com
  • News in ENGLISH
  • தமிழீழம்
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • நாட்காட்டி
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

கட்டுரைகள்

இலக்கை நோக்கி நகர்பவர்களிற்கு “மேதகு” சிந்தனை வழிகாட்டும்!

by Amizhthu 13 December 2025
written by Amizhthu

சோழப்பேரரசு வீழ்ச்சியடைந்த தொள்ளாயிரம் ஆண்டுகளின் பின்னர், மீண்டெழுந்த தமிழினம்,மூன்றாம் இராசேந்திர சோழனின் பின்னர், தமிழ் இனத்தின் மரபுவழித் தொடர்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாகும். தமிழினத்தின் மீண்டெழுந்த வீரத்தின் சிந்தனையாளர், தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களே

தமிழினத்தின் வரலாற்றில் கடல் கடந்தும் பேரரசை நிறுவியது சோழப் பேரரசு காலகட்டத்தில்தான்.

அதேபோல 21ம் நூற்றாண்டில் ஒரு non-state military power ஆக, அதி உச்ச போரியல் சாதனைகளை செய்தது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் மட்டுமே.

தமிழினத்திற்கென ஒரு இறையாண்மை அரசை உருவாக்க முயன்றதும் இந்த ஆயிரம் வருட வரலாற்றில் விடுதலை புலிகள் மட்டுமே.

இன்னும் சுருக்கமாகச் சொன்னால் ‘உலக ஒழுங்கிற்கு’ தமிழர் என்ற இனம் இருப்பதாக தெரிந்ததே விடுதலைபுலிகளின் போரியல் சாதனைகளால்தான். அதற்கு முன்பு தமிழர் என்ற இனம் ‘இந்தியர்கள்’, ‘இலங்கையர்கள்’ என அழைக்கப்பட்டு வந்தது.

ஆக தமிழர் இன வரலாற்றில் இரு பெரும் முக்கியமான வரலாற்று புள்ளிகள் சோழ பேரரசு, மற்றையது தமிழீழ விடுதலைப்புலிகள்.

ஆனால் சோழப் பேரரசையும் , விடுதலை புலிகளையும் தொடர்புபடுத்தக்கூடிய சில வரலாற்று நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

அந்த சில வரலாற்று நிகழ்வுகள்,

தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் போராட்ட வாழ்க்கையில், அவர் கொடுத்த முதலாவது நேர்காணல் , இந்திய ஊடகவியலாளர் அனிதா பிரதாப்பிற்கு ஆகும் . இது நடந்தது 1984 ம் ஆண்டு மார்ச் மாதம்.

அதில் அனிதா பிரதாப் பின்வரும் கேள்வியை கேட்கிறார்.

அனிதா பிரதாப்: உங்களை ‘புலிகள்’ என்று ஏன் அழைத்துக்கொள்கிறீர்கள்?

தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச் சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால்தான் எமது இயக்கத்திற்கு ‘ தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்று பெயரிட்டேன். புலிச் சின்னமானது தமிழ்தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன் கெரில்லா யுத்த முறையையும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது.

மேலே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன், ‘தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச் சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால்தான்’ என்று குறிப்பிடுவது சோழ பேரரசின் அதி உன்னதமான காலகட்டத்தை பற்றியே. அந்த காலகட்டம்தான் தமிழர் இன வரலாற்றில் அதி உச்சங்களை தொட்ட காலம். இரண்டாவது நிகழ்வு – தேசியத் தலைவர் பிரபாகரன் தமது கடற்புலி பிரிவிற்கு ஆரம்பத்தில் வைத்திருந்தபெயர் ‘கடல் புறா’.

அது என்ன ‘கடல் புறா’?

தமிழின் வரலாற்று புனைவு எழுத்தாளர்களில் பெரும் புகழ்பெற்றவர் எழுத்தாளர் சாண்டில்யன். அவரின் மிகப்புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றுதான் ‘கடல் புறா’.

இந்த கடல் புறா வரலாற்று நாவல் சோழ சாம்ராஜ்யத்தின் பெரும் தளபதி கருணாகர பல்லவனை நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாவல்.

போரியல் ஆய்வாளர்கள் சோழக் கடற்படையே அன்றைய உலகின் மிகப்பலமான கடற்படை என்பதை உறுதி செய்கிறார்கள்.

அதனை உள்வாங்கிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் , தமது கடற்புலிப் படைகளுக்கு ‘கடல் புறா’ என 80 களில் பெயர்வைத்தார்.

சோழர்களின் கடற்படையைப் போலவே, கடற்புலிகளும் வீரத்தில், அதி் உச்சத்தை தொட்டார்கள்.

உலகில் இருந்த non-state ஆயுத பல இயக்கங்களிலேயே, ஒரு நாட்டின் conventional navy இற்கு சம தரப்பாக இருந்து ஒரு பெரும் கடற்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது விடுதலை புலிகள் மட்டுமே.

சோழர்களின் பக்கவாட்டில் பாயும் புலிக்கு பதிலாக முகத்தை மட்டும் காட்டி பாயும் புலியை தமது இயக்கத்தின் இலச்சினையாக வைத்துக்கொண்டதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன் சொன்ன காரணம் ஆழமானது.

தனது உடலின் பக்கத்தை காட்டிக்கொண்டு பக்கவாட்டில் பாயும் புலி, எதிரிகள் தாக்கக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்கிறது. அத்தகைய சந்தர்ப்பத்தை எதிரிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது என்பதால் முகத்தை மட்டுமே காட்டிக்கொண்டு பாயும் புலியை இலச்சினையாக தேர்ந்தெடுத்தேன் என தேசியத் தலைவர் பிரபாகரன் கூறுகிறார். ஆகமொத்தத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடிப்படைகளை அங்குலம் அங்குலமாக செதுக்கிய சிந்தனைச் சிற்பி எமது தேசியத் தலைவர் அவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இலக்கை நோக்கி நாங்கள் உறுதியுடன் பயணிக்கப் பயணிக்க எமக்குத்தேவையான வரலாற்று வழிகாட்டல்கள் ஆங்காங்கே புதைத்திருக்கும்.

நிச்சயமாக தேசியத் தலைவரின் சிந்தனையை ஏற்று அவர் வழித்தடத்தில் இலக்கை நோக்கி நகர்பவர்களிற்கு மேதகு பிரபாகரன் சிந்தனை வழிகாட்டும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
13 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
புலம்பெயர் தமிழர்கள்

அடிக்கற்கள் – வணக்க நிகழ்வு 2026 சுவிஸ்

by Amizhthu 13 December 2025
written by Amizhthu

அடிக்கற்கள் – வணக்க நிகழ்வு 2026 சுவிஸ்

25/01/2026
15:30 மணி – 17:30 மணி
Salle Route Alloys Fauquez 21, Lausanne, 1018

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
13 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஆசியா

காலநிலை மாற்றம் தீவிரப்படுத்திய வெள்ளப் பேரழிவுகள் – இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்தில் 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

by Amizhthu 12 December 2025
written by Amizhthu

தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவு வெள்ளம்

நவம்பர் மாதம் நடுப்பகுதியிலிருந்து தொடர் மழை மற்றும் சூறாவளிகள் இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்தை தாக்கி, சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய பேரழிவாக மாறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தகவலின்படி, 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்; சுமார் 11 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில், “டிட்வா” சூறாவளி 25 மாவட்டங்களிலும் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளங்களை ஏற்படுத்தியது. பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்ததாவது, குறைந்தது 479 பேர் உயிரிழந்துள்ளனர், 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர், மேலும் 11 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதை “வரலாற்றில் இல்லாத மனிதாபிமான நெருக்கடி” என அறிவித்து அவசர நிலையை அறிவித்தார்.

இந்தோனேஷியாவில், மிக அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், குறிப்பாக ஆச்சே, வட சுமாத்திரா, மேற்கு சுமாத்திரா பகுதிகளில். கடும் மழை மற்றும் நிலச்சரிவுகள் 1.56 இலட்சம் வீடுகளை அழித்துள்ளன; 10 இலட்சம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

தாய்லாந்தில், “சென்யார்” சூறாவளி தெற்கு மாகாணங்களில் 12 பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது. 176 பேர் உயிரிழந்துள்ளனர், 38 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹாட் யாய் நகரம் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை ஒரே நாளில் பெற்றது.

காலநிலை மாற்றத்தின் தாக்கம்

வானிலை நிபுணர்கள் எச்சரிக்கையில், காலநிலை மாற்றம் பருவமழை மற்றும் சூறாவளிகளை அதிக தீவிரமாக்கியுள்ளது. கடல் வெப்பநிலை உயர்வு, நீண்டகால லா-நின்யா சுழற்சிகள் புயல்களை வலுப்படுத்தியுள்ளன. இந்தோனேஷியாவின் சுமாத்திராவில் வனச்சூழல் அழிப்பு மற்றும் நில மேலாண்மை குறைபாடுகள் வெள்ள பாதிப்புகளை மேலும் மோசமாக்கியுள்ளன.

குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். யூனிசெஃப் தகவலின்படி, 41 இலட்சம் குழந்தைகள் கல்வி தடங்கலுக்கு உள்ளாகியுள்ளனர்; பலர் சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் இல்லாத முகாம்களில் வாழ்கின்றனர்.

சர்வதேச உதவி

ஆசிய நாடுகள் இராணுவத்தை மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனுப்பியுள்ளன. இந்தியா, வங்காளதேசம், ஜப்பான் ஆகியவை இலங்கை மற்றும் இந்தோனேஷியாவுக்கு அவசர உதவி குழுக்களை அனுப்பியுள்ளன. ஐ.நா மற்றும் மனிதாபிமான அமைப்புகள் உணவு, மருத்துவ உதவி, சுகாதார வசதிகளை வழங்குகின்றன.

எதிர்நோக்கு

டிசம்பர் மாதம் முழுவதும் மழை தொடரும் என வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. அதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும். மீள்கட்டுமான செலவுகள் பில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கைக்கு இது மிகப்பெரிய சவாலாகும்.

இந்த பேரழிவு, காலநிலை மாற்றத்துக்கு எதிரான தழுவல் நடவடிக்கைகள், வலுவான வெள்ள எச்சரிக்கை அமைப்புகள், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

சுருக்கம்:
இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்தில் வெள்ளப் பேரழிவுகள் 1,600-க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளன. காலநிலை மாற்றம் மழை மற்றும் சூறாவளிகளை தீவிரப்படுத்தி, கோடிக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்துள்ளது. அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் அவசர உதவியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், நிபுணர்கள் எச்சரிக்கையில் – இத்தகைய பேரழிவுகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
12 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஐரோப்பா

ஐரோப்பா போருக்குத் தயாராக வேண்டும் என எச்சரிக்கை – நேட்டோ தலைமைச் செயலாளர்

by Amizhthu 12 December 2025
written by Amizhthu

பெர்லினில் வியாழக்கிழமை உரையாற்றிய நேட்டோ தலைமைச் செயலாளர் மார்க் ருட்டே, “ஐரோப்பா ஏற்கனவே ஆபத்தில் உள்ளது” என்றும், “எங்கள் தாத்தா-பாட்டிகள் அனுபவித்த அளவிலான போருக்குத் தயாராக வேண்டும்” என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

ரஷ்யா “இப்போதே போருக்கு தயாராக உள்ளது” என அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ள நிலையில், நேட்டோ வான்வெளியில் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால், ஐரோப்பா அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவிலான ராணுவ மோதலை எதிர்கொள்ள நேரிடலாம் என ருட்டே எச்சரித்தார்.

அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்

ருட்டே, உக்ரைனில் நடக்கும் போரில் ரஷ்யா தனது படைவீரர்களை பெருமளவில் பலியிடத் தயங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேற்கு நுண்ணறிவு மதிப்பீடுகளின்படி, 2022 ஆம் ஆண்டு முழுமையான ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர் மேலும், சீனா ரஷ்யாவின் உயிர்க்கோடு எனக் குறிப்பிட்டார். ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மின்னணு கூறுகளில் 80 சதவீதம் சீனாவில் இருந்து வருகிறது. “கீவ் அல்லது கார்கிவ் நகரங்களில் பொதுமக்கள் உயிரிழக்கும் போது, அந்த ஆயுதங்களில் சீன தொழில்நுட்பம் அடங்கியிருக்கும்,” என ருட்டே வலியுறுத்தினார்.

அவசர நடவடிக்கைகள் தேவை

நேட்டோ உறுப்பினர்கள் 2035க்குள் பாதுகாப்புச் செலவுகளை உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் 5 சதவீதம் வரை உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், ருட்டே “காத்திருக்க நேரமில்லை” எனக் கூறி, உடனடி நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.

பிரிட்டனின் ஆயுதப் படை அமைச்சர் ஆல் கார்ன்ஸ் கூட, “போர் நிலை” என அறிவித்து, கடந்த ஆண்டு ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக எச்சரித்தார்.

அமைதி பேச்சுவார்த்தைகள் சிக்கலில்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி புதிய 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்காவுக்கு சமர்ப்பித்துள்ளார். ஆனால், நிலப்பரப்பு தொடர்பான சமரசங்களில் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன. இதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவான தீர்வை வலியுறுத்தி, ஐரோப்பிய பாதுகாப்பில் அமெரிக்க பங்கு குறையக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாற்று ஒப்புமை

“எங்கள் தாத்தா-பாட்டிகள் அனுபவித்த அளவிலான போருக்குத் தயாராக வேண்டும்” எனக் கூறிய ருட்டே, இரண்டாம் உலகப்போரின் அழிவை நினைவூட்டினார். “ரஷ்யா மீண்டும் ஐரோப்பாவுக்கு போரைக் கொண்டு வந்துள்ளது. நாம் தயாராக இருக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
12 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

by Amizhthu 12 December 2025
written by Amizhthu

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்குவதற்கு என மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: 2027 ம் ஆண்டு நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பானது, முதல்முறையாக டிஜிட்டல் முறையில் நடக்கிறது. தரவுகளை பாதுகாப்பாக வைக்கும் வகையில் டிஜிட்டல் முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது.

முதல் கட்டமாக 2026 ஏப்., முதல் செப்டம்பர் வரையிலும், இரண்டாம் கட்டமாக 2027 பிப்ரவரியிலும் நடைபெறும். – இவ்வாறு அவர் கூறினார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
12 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது; இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

by Amizhthu 12 December 2025
written by Amizhthu

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாத குழுவினர் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில், உள்ள எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு பயங்கரவாதக் குழு நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிப்பதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர்.

பின்னர் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. எல்லை பாதுகாப்புப் படையினர் அந்தக் குழுவை வெற்றிகரமாக சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் 3 பேர் சரணடைந்தனர்.

அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் தொலைபேசிகள் ஆகியவை அடங்கும். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
12 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: விசாரணையை 15 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

by Amizhthu 12 December 2025
written by Amizhthu

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ( திங்கட்கிழமை) ஐகோர்ட் மதுரைக்கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.

‘திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை’ என ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ‘கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.

மேல்முறையீடு – இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்’ என்றார்.

நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை – இந்த வழக்கில், இன்று (டிச.,12) நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கியது. போலீஸ் கமிஷனர் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆஜரானார். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், வாதங்களை முன் வைத்தார்.

ராமன் வாதத்தில், ”இது ஒன்றும் பொது நல வழக்கு அல்ல. இந்த வழக்கு, அந்த இடத்தில் தீபத்துாண் இருந்ததா என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. முதலில் அந்த இடத்தில் தீபத்துாண் இருந்ததா என்பதையும், இரண்டாவதாக, அதில் தீபம் ஏற்றும் சம்பிரதாய நடைமுறையின் அவசியம் குறித்தும் மனுதாரர் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றார். பிரிவி கவுன்சில் தீர்ப்பு உட்பட இது தொடர்பான வெவ்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அட்வகேட் ஜெனரல் வாதங்களை முன் வைத்தார்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்த வாதம்

கோயில் தரப்பு வக்கீல்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல, அது கிரைனைட் தூண். நீதிபதிகள்: மலை உச்சியில் இருப்பது கிரைனைட் தூண் என்பதை யார் உறுதி செய்தது ?

கோயில் தரப்பு வக்கீல்: பல புகைப்படம் பார்த்து பேசுகிறேன். அரசு அதிகாரிகள் அதை சர்வே கல் என்கின்றனர்

நீதிபதிகள் : இது சர்வே கல்லா ? தீபத்தூணா ? விளக்குத்தூணா? என்பதை வல்லுநர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அதை கூற முடியாது எனத் தெரிவித்தனர். மேலும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
12 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் 18ம் தேதி ஈரோட்டில் பிரசாரம் செய்ய உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

by Amizhthu 12 December 2025
written by Amizhthu

வரும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது; வரும் 18ம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு வருகிறார். காலை 11 மணியில் இருந்து 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். அரசு அதிகாரிகள் ஆலோசனைகளைக் கேட்டு இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். புதுச்சேரிக்குப் பிறகு, முதல்முறையாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். விஜய் தான் வரும் கால முதல்வர் என்பதை ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைய வருபவர்களை வரவேற்போம் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நேற்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் யாரை வைக்க வேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார். நேற்றைய கூட்டத்தில் தவெகவில் பல பேர் இணையும் வாய்ப்பு இருக்கிறது என்று தான் சொன்னேன். தவெக அதிமுகவாக மாறும் என்று நான் சொல்லவில்லை. அனைவரையும் இணைப்போம், அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது தனி. இப்போது நான் விருப்பப்பட்டு, தவெகவில் இணைந்து விட்டேன். எம்ஜிஆர் காலத்திலேயே உயர்மட்ட குழு வரையில் இருந்தவன். புதிதாக வந்தவர்கள் என்னை உறுப்பினராக நீக்க முடியாது. என்னை அரவணைத்து செல்லும் இயக்கத்தில் சேர்ந்ததில் எந்த தவறும் இல்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் எப்படி இருந்தனோ, அது போன்று தான் தவெகவில் தற்போது இருக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
12 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது!

by Amizhthu 12 December 2025
written by Amizhthu

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியமை மற்றும் விபத்தைத் தவிர்க்கத் தவறியமை  உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
12 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

திருகோணமலை, குச்சவளி காவல் பிரிவுக்கு உட்பட்ட சலப்பையாறு பகுதியில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

by Amizhthu 12 December 2025
written by Amizhthu

திருகோணமலை,குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலப்பையாறு பகுதியின் திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியோரத்தில் இருந்து  இன்று வெள்ளிக்கிழமை (12-12-2025) காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 56 வயதுடைய பெண் ஆவார். 

இவர் வியாழக்கிழமை (11-12-2025) இரவு அயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக தனது வீட்டவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றதாக அவரது பிள்ளைகள் கூறியுள்ளனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. எனினும் இது ஒரு விபத்தாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
12 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

திமுக அரசில் ஊழல், மோசடி நடக்காத துறையே இல்லை; அண்ணாமலை குற்றச்சாட்டு

by Amizhthu 12 December 2025
written by Amizhthu

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவு:

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்று உறுதியாகக் கூற முடியும். நகராட்சி நிர்வாகத்துறையில், ரூ.1,020 கோடி ஊழலும், அரசுப் பணி வழங்க ரூ. 888 கோடி லஞ்சமும் வசூலிக்கப்பட்டது குறித்து, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ய திமுக அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மற்றுமொரு மோசடி அரங்கேறியிருக்கிறது.

பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், ஊராட்சி செயலாளர் பதவிக்கு, நேர்முகத் தேர்வு நடத்தி அதில் தகுதி பெற்றவர்களை ஊராட்சி செயலாளர்களாக நியமிப்பது வழக்கம். தமிழகம் முழுவதும், இன்று டிசம்பர் 12ல் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று திமுக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

பல ஆயிரம் இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்துக் காத்திருந்த நிலையில், திடீரென நிர்வாகக் காரணங்களால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக, அனைவருக்கும் நேற்று மாலை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் ஏமாற்றமடைந்த இளைஞர்கள், தமிழக அரசின் அதிகார பூர்வ இணையதளத்தில் பார்த்தபோது, நேர்முகத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலிலேயே குளறுபடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற இளைஞர்களைத் தகுதி நீக்கம் செய்தும், அவர்களை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்களைத் தேர்வு செய்தும், மோசடி செய்திருக்கிறது திமுக அரசு. அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டுகள் தங்கள் விருப்பு வெறுப்புகளைத் தியாகம் செய்து, கடும் உழைப்பைக் கொடுத்துக் காத்துக் கொண்டிருந்த தகுதியான பல ஆயிரம் இளைஞர்களை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு.

உடனடியாக திமுக அரசு குளறுபடியாக வெளியிட்டிருக்கும் ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என்றும், முறையாக, மதிப்பெண் அடிப்படையில், தகுதியான இளைஞர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். – இவ்வாறு அண்ணாமலை தமது பதிவில் கூறியுள்ளார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
12 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

இந்திய மக்களவையில் திருப்பரங்குன்றம் பிரச்சினையை அனுராக் தாக்கூர் எழுப்பினார்: தமிழக தி.மு.க. எதிர்ப்பு

by Amizhthu 12 December 2025
written by Amizhthu

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாஜ எம்பி அனுராக் தாக்கூர் லோக்சபாவில் பேசினார். இதற்கு திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

லோக்சபாவில் பாஜ எம்பி அனுராக் தாக்கூர் பேசியதாவது: முக்கியமான விஷயத்தை எழுப்ப விரும்புகிறேன். இந்தியாவில் ஒரு மாநிலம் சனாதன தர்மத்துக்கு எதிரான மாநிலமாக மாறி வருகிறது. அம்மாநில அமைச்சர்கள் சனாதன தர்மத்துக்கு எதிராக அறிக்கை வெளியிடுகின்றனர். ஹிந்து பக்தர்கள் கோயில் செல்வதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது.

தமிழக அரசை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதுடன், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை வேண்டும் என்றே அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளது. ஹிந்துக்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. ஹிந்துக்களை தடுப்பது ஏன் என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் அவையின் நடுவே வந்து கோஷம் போட்டனர். இதனையடுத்து லோக்சபா சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
12 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • News in ENGLISH
  • தமிழீழம்
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • நாட்காட்டி
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d