அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

தமிழகம்

‘தமிழகத்தில் மழையில் சேதம் அடைந்துள்ள பயிர்களுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு 8,000 ரூபாய் அரசு அறிவித்துள்ள நிலையில், 20,000 ரூபாய் வழங்க வேண்டும்’ என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான, ‘டிட்வா’ புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. அக்டோபரில் பெய்த மழையிலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

அப்பயிர்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, ஹெக்டருக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ‘அரசு கூடுதல் நிவாரணம் அறிவிக்க வேண்டும்’ என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்வதற்கு, விதை நெல் 1,200 ரூபாய்; நாற்றங்கால் தயாரிக்க 1,000; டி.ஏ.பி., உரம் வாங்க 1,000; டி ராக்டர் உழவுப் பணிக்கு 3,600; நடவுப் பணிக்கு 5,000 ரூபாய் செலவிடப்படுகிறது.

ஆனால், ஹெக்டருக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், ஏக்கருக்கு 8,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, எந்த வகையிலும் உதவாது. குறைந்தபட்சம் ஏக்கருக்கு 20,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று (03-12-2025) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03-12-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள்:
விழுப்புரம்
செங்கல்பட்டு
கள்ளக்குறிச்சி
கடலூர்

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள்:
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்

புதுச்சேரியிலும் இன்று (03-12-2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒத்திவைப்பு
இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஆசியா

சீனா–ஜப்பான் உறவுகளில் பிளவு: தைவான் விவகாரம், பொருளாதார தாக்கம்

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

சீனா–ஜப்பான் உறவுகள் சமீப ஆண்டுகளில் மிகக் கடுமையான நிலையை எட்டியுள்ளன. தைவான் தொடர்பான கருத்து மோதல்கள் ஐக்கிய நாடுகள் சபை வரை பரவி, பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தி, வரலாற்று குற்றச்சாட்டுகளை மீண்டும் உயிர்ப்பித்துள்ளன.

தூதரக பதற்றம்

நவம்பர் தொடக்கத்தில், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி பாராளுமன்றத்தில், சீனா தைவானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அது ஜப்பானுக்கு “உயிர் அச்சுறுத்தும் சூழ்நிலை” ஆகும் எனக் கூறினார். இதனால் கூட்டாளிகளுடன் இராணுவமாகச் செயல்பட வேண்டிய நிலை உருவாகலாம் என அவர் குறிப்பிட்டார்.

பீஜிங், இந்தக் கருத்தை ஒரே-சீனா கொள்கைக்கு எதிரானதாகக் கண்டித்து, போர் பிந்தைய சர்வதேச ஒழுங்கை ஜப்பான் பாதிக்கிறது என குற்றம் சாட்டியது.

ஐ.நா. தூதர் ஃபூ காங், ஜப்பான் பிரதமரின் கருத்தை “இருதரப்பு உறவுகளுக்கான மிகப்பெரிய சவால்” எனக் கூறி, அதை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரினார். ஜப்பான் தூதர் கசுயுகி யமசாகி, ஜப்பானின் நிலைப்பாடு போர் பிந்தைய பாதுகாப்பு கொள்கையுடன் இணங்குகிறது எனக் கூறினார். ஆனால் தைவானின் மீது சீனாவின் உரிமையை நேரடியாக உறுதிப்படுத்தவில்லை.

வரலாற்று பின்னணி

சீன அதிகாரிகள், ஜப்பான் “வரலாற்றை எதிர்கொள்ள வேண்டும்” என்றும் கெய்ரோ பிரகடனம் மற்றும் போட்ஸ்டாம் பிரகடனம் போன்ற ஆவணங்களில் தைவான் சீனாவுக்கு திரும்பியதாக குறிப்பிடப்பட்டிருப்பதை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
ஜப்பான் தனது பாதுகாப்பு செலவுகளை அதிகரிப்பதும், அணு கொள்கை விவாதங்களை முன்னெடுப்பதும், “மிலிட்டரிசம் மீண்டும் உயிர்ப்பிக்கிறது” என பீஜிங் எச்சரிக்கிறது.

பொருளாதார தாக்கம்

இந்த தூதரக பதற்றம் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன அரசு, ஜப்பான் பயணத்தைத் தவிர்க்கும் அறிவுறுத்தலை வெளியிட்டதையடுத்து, சுற்றுலா மற்றும் சில்லறை பங்குகள் சரிந்தன. ஷிசெய்டோ, இசெடான் மிட்சுகோஷி போன்ற நிறுவனங்கள் இரட்டை இலக்க வீழ்ச்சியை சந்தித்தன. நிக்கெய் 225 குறியீடு இரண்டு நாளில் 3% வீழ்ச்சி கண்டது.
கடந்த ஆண்டு ஜப்பானுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 27% சீனர்கள் என்பதால், நீண்டகால பதற்றம் ஜப்பானின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இராணுவ மற்றும் பிராந்திய விளைவுகள்

சொற்களைக் கடந்தும், இரு தரப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சீன கடலோர காவல் படை, சென்காகு/தியாவ்யூ தீவுகள் அருகே கண்காணிப்புகளை அதிகரித்துள்ளது. அதேசமயம், ஜப்பான் யோனகுனி தீவில் ஏவுகணைகளை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இது தைவானுக்கு வெறும் 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இது, தைவானின் நிலைமை பீஜிங்–தைபே–டோக்கியோ ஆகியவற்றின் பாதுகாப்பு கணக்கீட்டில் முக்கியமான புள்ளியாக மாறியிருப்பதை காட்டுகிறது.

எதிர்நோக்கு

2025 தொடக்கத்தில் APEC உச்சி மாநாட்டில் தலைவர்கள் சந்தித்தபோது இருந்த எச்சரிக்கையுடனான நம்பிக்கை, தற்போது முற்றிலும் மாறிவிட்டது.

இரு அரசுகளும் கடுமையான நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காவிட்டால், சீனா–ஜப்பான் உறவுகளில் ஏற்பட்ட பிளவு நீண்டகால தூதரக பிளவாக மாறக்கூடும். இது ஐ.நா. அரங்கில் இருந்து ஆசிய சந்தைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு வரை பரவலான விளைவுகளை ஏற்படுத்தும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 பயணிகள் விமானம் முறையான தகுதிச் சான்றிதழ் இல்லாமல் பல முறை இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ள நிலையில், ‘ஏர் இந்தியா’ நிர்வாகம் மற்றும் டி.ஜி.சி.ஏ., அமைப்பு தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன.

‘டாடா’ குழுமத்தின், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், குஜராத்தின் ஆமதாபாதில் கடந்த ஜூன் 12ம் தேதி கோர விபத்தை சந்தித்தது.

இதில், ஒரு பயணி தவிர விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

இதையடுத்து, அனைத்து விமான நிறுவனங்களின் பயணியர் விமானங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பாதுகாப்பு விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டன. இந்நிலையில், ‘ஏர் இந்தியா’ நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்நிறுவனத்துக்கு சொந்தமான, ‘ஏர்பஸ் ஏ320’ ரக பயணியர் விமானங்கள், கடந்த மாதத்தில் விமானப் பயண தகுதிச் சான்றிதழ் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மாதாந்திர பதிவேடுகளை ஆய்வுசெய்தபோது, ‘ஏர் இந்தியா’ விமானம் பயணியர் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதையடுத்து, டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையை துவக்கியுள்ளது.

மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த, ‘ஏர் இந்தியா’ நிர்வாகம், இதுதொடர்பாக தனியாக விசாரணை நடத்தி வ ருகிறது.

தகுதி சான்றிதழ் என்றால் என்ன? – விமானம் பாதுகாப்பாகப் பறக்கத் தகுதியுடையதா என்பதைச் சோதித்து உறுதி செய்த பிறகு, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விமானப் பயணத் தகுதிச் சான்றிதழை வழங்கும். இந்தச் சான்றிதழ் ஆண்டுதோறும் விமானங்களை சோதனை செய்து வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழ் சரியாக இன்றி ஒரு விமானத்தை இயக்குவது மிகவும் கடுமையான விதிமீறல்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையில் க.பொ. உயர்தர பரீட்சைகளை ஜனவரியில் நடத்த தீர்மானம்

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நேற்று செவ்வாய்க்கிழமை (02-12-2025) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அறிவித்தார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையின் மலையகம் பகுதிகளில் உதவியின்றி சிக்கித் தவிக்கும் மக்களின் அவலநிலை, மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

நாட்டில் கடந்த வாரம் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் மலையகத்தின் பெரும்பாலான பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் ஏனைய மாவட்டங்களை விட அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

நேற்று மாலை வரை கண்டியில் 88 உயிரிழப்புக்களும், பதுளையில் 83, நுவரெலியாவில் 75 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன் அது மாத்திரமின்றி கண்டியில் 150 பேரும், நுவரெலியாவில் 63 பேரும், பதுளையில் 48 பேரும் காணாமல் போயுள்ளனர். இந்த மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்ட சில பகுதிகளில் மீட்பு பணிகளை முன்னெடுப்பதில் கூட கடும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்கள் தெரிவித்துள்ளன.

எனவே அப்பிரதேசங்களில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனோர் தொடர்பில் துள்ளியமாக தரவுகளையும் பெற முடியாமலிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாவலப்பிட்டி – தொலஸ்பாகை, பரகல, மடுல்சீமை, ஹங்குராங்கெத்த, நானுஓயா, ரதல்ல, இறம்பொடை, தலவாந்தெண்ணை, கந்தப்பனை, றாகல, மாத்தளை – கம்மடுவ, இங்குருவத்த, ரம்புக்எல – விலானகம, டயகம – போடைஸ், கொத்மலை – ரம்பொடகம, மஸ்கெலியா, நாவலப்பிட்டி – உலப்பனை போன்ற பல பிரதேசங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான பிரதேசங்களில் நேற்று வரை தொலைதொடர்புகளும் வழமைக்கு திரும்பவில்லை. இதன் காரணமாக அங்கு உதவிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்குவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகளில் உள்ள தானியக்க பணம் வழங்கும் இயந்திரங்களும் (ஏ.டி.எம்.) செயலிழந்துள்ளன. இதனால் வங்களிலிருந்து பணத்தை எடுப்பதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையில் தித்வா புயலின் தாக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465ஐ தாண்டியது.

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

தித்வா புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பதிவாகியுள்ள உயிரிழப்புக்கள் 465 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 336 நபர்கள் காணாமல் போயுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலும் 565 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 20 271 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும் 64 483 குடும்பங்களைச் சேர்ந்த 233 015 நபர்கள் 1441 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

களனி கங்கை, மல்வத்து ஓயா மற்றும் மகாவலி கங்கை என்பவற்றுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பெரும்பாலான வான் கதவுகள் மூடப்பட்டாலும், சில நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய அநுராதபுரம் – இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இரு வான்கதவுகளும், குருணாகலில் தெதுருஓயா நீர்த்தேக்கத்தில் இரு வான் கதவுகளும், கண்டியில் – பொல்கொல்ல, கெனியோன், விக்டோரியா, ரன்தம்பே நீர்த்தேக்கங்களின் 14 வான் கதவுகளும், மொனராகலையில் வெஹரகல நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகளும், மாத்தளையில் போவதென்ன நீர்த்தேக்கத்தில் 6 வான்கதவுகளும், பதுளையில் உல்ஹிட்டிய – ரத்கிந்த நீர்த்தேகத்தில் 6 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனோரை தேடும் பணிகள் இலங்கை, இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த மீட்பு குழுக்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சில பிரதேசங்களில் மீட்க்கப்படும் சடலங்கள் கொண்டு செல்வதற்கு இடங்கள் இன்றி, குறித்த பகுதிகளிலேயே பிரதேசவாசிகளால் நல்லடக்கமும் செய்யப்படுகின்றன. கொத்மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 9 பேரது சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

கொழும்பில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்திய களனி கங்கையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் களனி கங்கையை அண்மித்த இரு மறுங்கிலுமுள்ள தாழ் நிலப்பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. எனவே அப்பகுதிகளில் வாழும் மக்களை தற்போது தமது இருப்பிடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

அகவை 77 “புதுவை இரத்தினதுரை” தமிழீழத்தின் விடுதலை கவிஞன் (03.12.1948)

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

தமிழீழத்தின் விடுதலை கவிஞன் “புதுவை இரத்தினதுரை” (வரதலிங்கம் இரத்தினதுரை) தமிழீழ கலை, பண்பாட்டு பிரிவின் பொறுப்பாளர்.

புதுவை இரத்தினதுரை என அழைக்கப்படும் வரதலிங்கம் இரத்தினதுரை (பிறப்பு: திசம்பர் 3, 1948) ஈழத்துக் கவிஞரும், பாடலாசிரியரும், சிற்பக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராகப் பணியாற்றியவர்.இவர் ஏராளமான தமிழ்த் தேசியப் புரட்சிப் பாடல்களை எழுதியுள்ளார்.

2009 மே மாதத்தில் ஈழப் போர் முடிவுக்கு வந்த காலத்தில் காணாமல் போனார்.

இவர் இலங்கையின் வடக்குப் பகுதி விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த போது, தமிழீழ கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளராக இருந்தார்.

2016 மே 21 இல், தமிழ் கார்டியன், அவர் கடைசியாக 2009 மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தின் காவலில் காணப்பட்டதாக செய்தி வெளியிட்டது. 2012 இல், சிங்கள திவயின நாளிதழ், இதனை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தது.

வாழ்க்கைக் குறிப்பு

புதுவை இரத்தினதுரை யாழ்ப்பாண மாவட்டம், புத்தூரில் 1948 திசம்பர் 3 இல் சிற்பக் கலைஞர் கந்தையா வரதலிங்கம் (1916-2004), பாக்கியம் ஆகியோருக்கு இரண்டாவது மகவாகப் பிறந்தார்.

கலையுலகில்

இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். 2004 வரை இவர் ஏறக்குறைய 600 பாடல்கள் வரையில் எழுதியுள்ளார். இவர் எழுதிய இந்த மண் எங்களின் சொந்த மண் பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வுபூர்வமான பாடல் ஆகும். இவர் எழுதிய பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் என்ற ஆன்மிகப் பாடலை இலங்கை இராணுவ 2014 செப்டம்பரில் ஒலிபரப்புவதற்குத் தடை செய்தது.

வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்

வானம் சிவக்கிறது (1970)
இரத்த புஷ்பங்கள்(1980)
ஒரு தோழனின் காதற் கடிதம்
நினைவழியா நாட்கள்
உலைக்களம்
பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்

வெளிவந்த ஒலிநாடக்கள்

ஒலிநாடாக் கவிதைகள்

களத்தில் மலர்ந்தவை (01.02.1989)
எழுச்சிப் பாடல் ஒலிநாடாக்கள்
களத்தில் கேட்கும் கானங்கள்
கரும்புலிகள்
முல்லைப்போர்
ஊர்க்குயில்
ஆனையிறவு
கரும்புலிகள் II

பக்திப் பாடல் ஒலிநாடாக்கள்

நல்லை முருகன் பாடல்கள்
திசையெங்கும் இசைவெள்ளம்
கார்த்திகை வாசம்
துயர் வெல்லும் துணை – இவற்றுள் சில.

இவர் எழுதிய பாடல்களில் சில:

இந்த மண் எங்களின் சொந்த மண்
ஏறுது பார் கொடி
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
பூ மலர்ந்தது கொடியினில்
தூக்கமா கண்மணி பள்ளியெழு
பாதைகள் வளையாது எங்கள் பயணங்கள் முடியாது
உயிரினும்‌ மேலான தாய்‌நாடு
காற்றுக்கும் கை முளைக்கும்
குயிலே பாடு
சிறகு முளைத்த குருவி உனக்கு
பூபாளம் பாடும் நேரம்
பால்மணம் மாறாத பிஞ்சுகள்
விண்வரும் மேகங்கள் பாடும்
எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகிறோம்
தூரம்‌ அதிகமில்லை
வேர்கள் வெளியினில் தெரிவதில்லை
காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே
இருளின் திசைகள் புலரும் வரையும் நிமிரும் மாலதி படையணி
பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
எழுவான் திசையில் கதிரோன் எழுவான்
பாடும் பறவைகள் வாருங்கள்
மேகங்கள் இங்கு வாருங்கள்
பரணி பாடுவோம்‌ பரணி பாடுவோம்‌
இந்திய இராணுவ புண்ணிய வான்களால்
துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கும்
வந்தது இந்திய ராணுவம்‌
வானம் இடிந்து விழுந்திடலாம்
யாகம் தொடங்கிவிட்டோம்
வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன்‌
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே
புலிவீரர்‌ புலிவீரர்‌ உருவாகுகின்றார்‌
காற்றில் கலந்த கடற்கரும்புலிகள்
சோழ வரலாறு மீண்டும் ஈழத்திலே பிறந்தது
இறக்கின்ற போதும் இலட்சியங்கள் இறப்பதில்லை
குனியாது கடல்வேங்கை ஒருநாளும்
செம்மணியின் மீதெழுந்து ஓலமிடும் சின்னச் சிட்டு
சங்கு முழங்கடா தமிழா
பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது
மேகம் விளையாடும் இங்கு மின்னல் பூச்சூடும்
ஆழக்கடலெங்கும் சோழமகாராஜன்
வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்
புதிய வரலாறு எழுதும் புலிவீரர்
கடலதை நாங்கள் வெல்லுவோம்
முந்தியெங்கள் பரம்பரையின் கடலம்மா
அலைவந்து தாலாட்டும் சிறுதீவு
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு
வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
பூவிழி தீசுமந்தாடட்டும்
கிழக்கு வானம் சிவக்கும் நேரம்
இந்தக் கடல் ஈழத்தமிழரின் சொந்தக் கடல்
பாரில் தமிழன் படும் வேதனைகள்
ஓட்டிகளே படகோட்டிகளே
ஊரெழுவில் பூத்தகொடி வேரிழந்தது
வாயிலொரு நீர்த்துளியும்
வந்தபடை வாழ்வளிக்கும் என்று நம்பினோமே
நல்லூரின் வீதியெங்கும் கண்ணீரால் வெள்ளம்
நல்லைநகர் வீதியிலே நாயகனே நீ கிடந்தாய்
வருக எங்கள் மக்களே
சின்னச் சின்னக் கண்ணில்
எங்குமே மங்களம் பொங்கியே தங்கிட வந்த நல் தைப்பாவை
ஆலமரக் கிளையில் இங்கு
விழியில் சொரியும் அருவிகள்
தென்தமிழீழமும் எங்களின் கையிலே
நிலவில் புதிய கவிதை எழுத நிமிர்ந்த புயல்களே
கிழக்கு வானம் சிவந்தது
ஒரு நாள் விடியும் இருளும் முடியும்
சின்னச் சின்னக் கூடுகட்டி நாமிருந்த ஊர் பிரிந்தோம்
நேற்றுவரை பூமாலை இவன் வாங்கிப்போவான்
நந்திக்கடலோரம் முந்தைத் தமிழ்வீரம்
சூரியன் யாருக்கும் சேவகம் செய்து அவர் கால்களில் பூசைகள் செய்யாது
விடியும் திசையில் பயணம் பயணம்
மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே
சுக்குநூறானது சிக்குறு
கண்களிலே நீர்வழிந்து கங்கை எனவாச்சு
வன்னிக்காற்றே என்னைத் தழுவி வாசல் வரையும் வீசாயோ
சிக்குறுய் சிக்குறுய் ஜயசிக்குறுய் வந்து சில்லெடுக்கின்றது ஜயசிக்குறுய்[58][52]
புதிய நூற்றாண்டே புதிய நூற்றாண்டே பிறந்து வா
ஒரு கூட்டுக் கிளியாக நாமிருந்தோம்
வீரத்தின் தாகம் அடங்காது
உப்பளக்காற்றே உப்பளக்காற்றே
சின்னப்பூவே சின்னப்பூவே
வன்னிக்காட்டில் வீசிய புயலே குமுதன்
கண்டி வீதியில் காதோரம் ஒரு சண்டை
கடலோரப் பூவாக அழகாகப் பூத்தாள்
பொன்னள்ளித் தூவுது வானம்
விடியும் திசையில் ஒளிபரவிட உதயம் புலரும்
பூமியின் மேனியைப் பூவிதழால் மேவிப் போகின்ற பூங்காற்றே
பூவெல்லாம் பூத்திடும் நாளல்லோ வந்தது பூமிக்கு கல்யாணக் காலமடி
உறவுகள் வேரில் விடுதலை நீரை
எங்கே எங்கே வேங்கைகள் எங்கே
தளராத துணிவோடு களமாடினாய்
ஆனையிறவின் மேனி தடவி
வாசலிலே அந்த ஒற்றைப் பனைமரம்
உயிர் மின்னல் கீறும் ஒரு ஓவியம்
பச்சை வயலே பனங்கடல் வெளியே
சூரியதேவனின் வேருகளே
வீரப்படை வெகு வீரப்படை கரிகாலன் வளர்த்திடும் சூரப்படை
மேகம் வந்து கீழிறங்கி
கல்லறைகள் விடை திறக்கும்
விழியூறி நதியாகி விழுந்தோடும் எம்மில்
மாமலை ஒன்று மண்ணிலே இன்று
கூவும் குயிலொன்று பாடிப்பறந்தது
காற்றடிக்கும் திசைகளெல்லாம்
விடுதலை எவரும் தருவதும் இல்லை
நித்திய புன்னகை அழகன்
நித்திய வாழ்வினில் நித்திரை கொள்பவன்
ராஜபறவை சிறகை விரித்து உயரப்போனது
கல்லறை மேனியர் கண் திறப்பார்களே
தாயக மண்ணே தாயக மண்ணே
வீரர்களே மாவீரர்களே உங்கள் விடுதலைக் கனவுகள் விரிகிறது
கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்
உலகத்தமிழர் ஒன்றாய் நின்று சபதம் எடுக்கின்றோம்
முலை தந்த உடல் இங்கு எரிகின்றதே
இது காலை விடிகின்ற நேரம்
மேலே போகும் முகிலை எவரும் கீழே விழுத்த முடியாது
வானத்திலேறியே வந்து வந்து குண்டு போட்டவன் கோட்டையிலே
வானத்தில் போயினர் எங்கள் வான்புலிகள்
அப்புகாமி பெற்றெடுத்த லொகுபண்டா மல்லி
“வரும் பகை திரும்பும்” ஒலிநாடாவில் உள்ள 3 பாடல்கள் (“கிட்டுப் படையணி குட்டிச் சிறியணி” பாடல் உட்பட)
மரணம் அழைத்த ரமணன் எங்கள் மனதை நிறைத்த வதனன்
கடலம்மா கடலம்மா கலங்கிடச் செய்தது ஏனம்மா
பொழுதாகில் இருள்மூடி விரியும்
தீர்ப்பு எழுது, உலகே தீர்ப்பு எழுது
பூவாய்ச் சொரியும் புன்னகை புரியும்
கூடுகலைந்த குருவிகள், இடமாறி அலையும் அருவிகள்
புலிமாமகன் பிரபாகரன் தலைமை போற்றி நில்லடா
விடியும் நேரம் பகைவன் தேசம் உறங்கிக் கிடந்தது
நள்ளிராவேளையில் நாதமணி வந்து நாலுதிசையிலும் கேட்குதடி
புதிய வருடமே புதிய வருடமே
வீரன் பேரைப் பாடியாடு காவடி
உயிராலே திலீபன் எடுத்த யாகம் வாழுதே
இடியா மழையா புயலா எதுவும் இங்கே பாடம் படிக்கும்
சீலன் புயலின் பாலன் திருக்கோணமலையின் வீரன்
தாயின் மடியில் பகைவன் தலையா, ஈழத்தமிழர் வாழ்வே இழிநிலையா
வாழ்வொன்றிங்கே வரும் நாள் வரையும் புலிகள் சேனை பணியாது
நெஞ்சினிலே பஞ்சு வைத்து எண்ணையிட்ட நெருப்பு
வானத்தில் ஓடிய மேகம் அழுதது
உடுக்கை அடிச்சு உடுக்கை அடிச்சு உருவையேத்தடா
தாய்நிலம் மீதினில் தீயிடுவோரின் தலையெடுத்தால் அது தர்மமடா
கடல் என்ன உனக்கென சீதனம் தந்த வளவோ
வெண்ணிற மேகங்கள் மேனி கறுத்திடில்
இந்நேரம் என் ஊரில் பொன்மாலையாகும் – இவற்றுள் சில.


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஈழத்தின் வரலாறு

02.12.1984 அன்று சிங்கள இராணுவம் தமிழர்கள் மீது நிகழ்த்திய ஒதியமலை படுகொலை நினைவில்

by Amizhthu 2 December 2025
written by Amizhthu

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் குற்றச் செயல்களில் தண்டனை பெற்ற சிங்களக் குற்றவாளிகளும் அவர்கள் குடும்பங்களும் இராணுவப் பாதுகாப்புடன் சிங்கள அரசு குடியேற்றி வந்தது. அந்த வகையில்  கென்பாம், டொலர்பாம் போன்ற இடங்களைத் தொடர்ந்து ஒதியமலைப் பகுதியிலும் குடியமர்த்தப்பட்டார்கள்.

1984ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் இருபத்தொன்பதாம் திகதியிலிருந்து டிசம்பர் இரண்டாம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.   டிசம்பர் மாதம் முதலாம் திகதி பதவியாவிலிருந்து ஒதியமலை கட்டுக்கரை ஊடாக வந்த இராணுவத்தினர் ஓதியமலைக் கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். மக்கள் அதிகாலை வீட்டின் கதவுகளைத் திறந்தபோது பச்சை நிற உடைகளுடனும் ஆயுதங்களுடனும்  இராணுவத்தினர் நின்றனர். “நாங்கள் அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தினுள் கூட்டம் வைக்கப் போகிறோம் ஆம்பிளைகள் மட்டும் வாங்கோ”  என சரளமாகத் தமிழில் கூறி முப்பதிற்கும் மேற்பட்ட ஆண்களை இராணுவத்தினர் கைது செய்து கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்று அவர்களின் கைகளை பின்னாற் கட்டி சித்திரவதை செய்து சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர். இராணுவம் சென்றபின் அங்கு சென்று பார்த்தபோது கைது செய்யப்பட்டவர்களில் இருபத்தேழு பேர் மிகவும் கோரமாக கொல்லப்பட்டு மண்டபத்தினுள் கிடந்தார்கள்.

இறந்தவர்களில் அனேகர் திருமணமாகிக் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவர்கள். பலர் முதியவர்கள், சிலர் கிளிநொச்சி மாவட்டம் பளை, பலியிலிருந்து வயல் வேலைக்காக ஒதியமலை வந்தவர்கள். வேறு சிலர் அயல் கிராமமான  பட்டிக்குடியிருப்பிலிருந்து உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக வந்தவர்களாவார்கள். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவத்தினை தொடர்ந்து ஒதியமலைக் கிராம மக்கள் இடம் பெயர்ந்து முல்லைத்தீவில் உள்ள பாடசாலைகளிலும் கோயில்களிலும் தஞ்சமடைந்தார்கள்.

கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்  நா.கநத்சாமி இப் படுகொலை தொடர்பாக கூறுகையில்:

“அன்றைய தினம் காலை 6.30 மணியளவிலே எமது கிராமத்திற்குள் புகுந்த இலங்கை இராணுவத்தினர் எமது கிராமத்தை நான்கு பக்கத்தாலும் சுற்றிவளைத்து, எமது கிராம மக்களில் கண்ணிற் பட்டவர்களையெல்லாம் பிடித்து ஓரிடமாக்கி அவர்களது மேலங்கியைக் கழற்றி அதனைக் கொண்டு அவர்களது கைகளைப் பின்பக்கமாகக் கட்டி ஒதியமலைக் குளக்கட்டருகே கொண்டு வந்தனர். அந்த நேரத்திலே அவ்வீதியாற் சென்ற செல்வராசா என்பவரது உழவு இயந்திரத்தை மறித்து அதிலிருந்தவர்களையும் பிடித்து கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்திற்குக் கொண்டு சென்றார்கள். சிறிது நேரத்தின் பின் அலறல் சத்தமும் அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தமும் கேட்டது. அத்துடன், பிடித்தவர்களில் வயோதிபர்களாகப் பார்த்து கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சின்னையா, கனகையா, கணபதிப்பிள்ளை ஆகியோரைத் தங்களது பாதுகாப்பிற்காக அவர்களுடைய பண்ணைக்கு எனது உறவினர் ஒருவரின் உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

இராணுவம் வந்ததை அறிந்து காட்டுக்குச் சென்றிருந்த நான் பின்னர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தினுள் ஓடிச்சென்று பார்த்தபோது மூன்று நான்கு பேராக நிறுத்தி வைத்து இருபத்தி ஏழு பேரையும் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்திருப்பதைக் கண்டேன். நான் பார்த்த பொழுது குற்றுயிருடன் இருந்த சிலரும் தண்ணீர் தண்ணீர் எனக் கேட்டுக் கொண்டு இறந்ததையும் கண்டேன். பின்னர் அவர்களில் கால் வேறு, தலை வேறாக இருந்தவர்களை சீராக கட்டடத்தின்  இரு மருங்கும் அடுக்கி விட்டு அங்கிருந்து கால்நடையாக முல்லைத்தீவு நோக்கி ஓடினோம். அந்த நேரம் இராணுவக் கெடுபிடிகள், ஊரடங்கு உத்தரவுகள் அதையும் மீறி பெரிய முயற்சியெடுத்து அரசாங்க அதிபர், காவற்றுறை அதிகாரிகள், நீதியாளர்கள், உதவி அரசாங்க அதிபர், கிராம சேவையாளர்கள் என அனைவரையும் அழைத்து வந்து நடந்த சம்பவத்தைக் காட்டினோம்.

இறந்தவர்களது கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்களது கண்கள், காதுகள், மூளைகள் வெளியிலே வந்த கோரக்காட்சியைப் பார்த்து அவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பின்னர் முழுக் கிராமத்தினரும் சேர்ந்து கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு முன்பாக பெரிய மரங்கள் போட்டு அதன் மேல் அவர்களை அடுக்கித் தீ மூட்டினோம். அதன் பின்பு இறந்த உறவுகளை நினைத்து அழுது புலம்பிக்கொண்டிருக்கும் சமயம் முல்லைத்தீவிலிருந்தும் சிலோன் தியேட்டர், டொலர்பாம், கென்பாம்களிலிருந்தும் இராணுவத்தினர் ஒதியமலை நோக்கி வருவதாகக் கேள்விப்பட்டு எல்லோரும் பாதுகாப்பிற்காக நெடுங்கேணி நோக்கி வந்தோம்.”

02.12.1984 அன்று ஓதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்.

  1. நாகமணி சின்னையா (வயது 50)
  2. நாகரத்தினம் கேதீஸ்வரன் (வயது 23)
  3. நல்லையா நவரட்ணம் (வயது 17)
  4. கந்தையா கனகையா
  5. கந்தையா பொன்னம்பலம் (வயது 45)
  6. கந்தையா சிவசிதம்பரம் (வயது 35)
  7. கிருஸ்ணபிள்ளை இராசலிங்கம் (வயது 29)
  8. கறுப்பையா தங்கராசா (வயது 18)
  9. கணபதிப்பிள்ளை சின்னையா (வயது 35)
  10. கணபதிப்பிள்ளை சிவபாதம் (வயது 28)
  11. தாமோதரம்பிள்ளை கணபதிப்பிள்ளை (வயது 51)
  12. தாமோதரம்பிள்ளை சதாசிவம் (வயது 46)
  13. தம்பிஐயா காசிப்பிள்ளை (வயது 45)
  14. தம்பிஐயா வேலுப்பிள்ளை (வயது 38)
  15. தம்பிஐயா சுப்பிரமணியம் (வயது 26)
  16. தம்பிஐயா சிவஞானம் (வயது 23)
  17. அழகையா ஜெககாதன் (வயது 17)
  18. கோவிந்தர் கணபதிப்பிள்ளை (வயது 55)
  19. பொன்னம்பலம் தேவராசா (வயது 25)
  20. வேலுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை (வயது 36)
  21. சுப்பையா கெங்காதரன் (வயது 26)
  22. சின்னையா இராசேந்திரம் (வயது 21)
  23. சிதம்பரப்பிள்ளை இராசையா (வயது 27)
  24. சங்கரப்பிள்ளை சபாரத்தினம் (வயது 40)
  25. சங்கரப்பிள்ளை சண்முகசுந்தரம் (வயது 25)
  26. சண்முகராசா இரவிச்சந்திரன் (வயது 16)
  27. வீரகத்தி தில்லைநடராசா (வயது 25)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
2 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஐரோப்பா

தாயகத்தில் நிலவி வரும் வெள்ள அனர்த்தத்திற்கான அவசர நிதி உதவி கோரல்.

by Amizhthu 2 December 2025
written by Amizhthu

Request for emergency financial assistance for the ongoing flood disaster in the homeland

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
2 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

யாழ்ப்பாணத்தில் எலிக் காய்ச்சலால் இருவர் உயிரிழந்தனர்

by Amizhthu 2 December 2025
written by Amizhthu

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த வருடமும் யாழ் மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில் தீவிரமாகப் பரவிய எலிக்காய்ச்சல் நோயினால் 8 இறப்புக்கள் ஏற்பட்டிருந்தன.

யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைக்குப் பின்னரே இந்த நோய்ப் பரம்பல் ஏற்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சல் நோயானது ஒரு வகை பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது.

எலிகள் போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ளநீர், வயல்நீர், சேற்று நிலங்களில் இக்கிருமிகள் சென்றடைகின்றன. மனிதர்கள் வெள்ளநீரில், வயல் நிலங்களில், சேற்று நிலங்களில் வேலை செய்யும் போது அவர்களின் தோலில் உள்ள புண்கள் அல்லது காயங்கள் மூலம் கிருமிகள் மனித உடலில் உட்செல்கின்றன.

இந்நோய் ஏற்படும் போது கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி, கடுமையான தலையிடி, இருமல், கண்கள் செந்நிறமாதல், வாந்தி, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

இதனால் மனித உடலில் சிறுநீரகம், சுவாசத்தொகுதி, இதயம், ஈரல், மூளை போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு மரணத்தை ஏற்படுத்தும்.

இந்நோயானது பெரும்பாலும் வயல்கள், சேற்று நிலங்களில் பயிர்செய்யும் விவசாயிகள் மத்தியிலும், கடல்நீரேரிகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் மத்தியிலும், வெள்ள நீருடன் தொடுகையில் ஈடுபடுபவர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றது.

இந்நோயிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வயல், சேற்று நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகள் கடல்நீரேரிகளில் மீன்பிடிப்பவர்கள் உடலில் காயங்கள் அல்லது புண்கள் இருப்பின் அவற்றை நீர் உட்புகாத வகையில் கட்டுப்போடுதல் வேண்டும்.

வெள்ளநீரில் அல்லது அசுத்தமான நீரில் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் கால், கைகளுக்கு பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும். வெள்ளநீரில் அவசியமின்றி விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வயல்களில், சேற்று நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளும், கடல்நீரேரி மீன்பிடித்தொழிலாளர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகளும் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை உங்களது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

வெள்ளநீருடன் தொடுகை ஏற்படுத்திக் கொள்பவர்களும் மேற்படி தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேற்படி நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக முதல் இரண்டு நாட்களுக்குள்ளேயே தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் தாமதமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதனாலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டன.

எனவே, பொது மக்கள் அனைவரும் இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
2 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

தயார் நிலையில் இல்லாமல் இலங்கை அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது. – சாணக்கியன்

by Amizhthu 2 December 2025
written by Amizhthu

மத்திய மாகாணத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டுள்ளார்கள். சில கிராமங்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இது கொலை. தயார் நிலையில் இல்லாமல் அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது. பேசுவதற்கு இடமளித்தால் உண்மை வெளிவரும் என்று அரசாங்கம் அச்சமடைகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01-12-2025) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் இன்று வெளிநடப்பு செய்வதாக அறிவித்துள்ளார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியாகிய நாங்களும் வெளிநடப்பு செய்கிறோம். வடக்கு கிழக்கு உட்பட ஒட்டுமொத்த பகுதிகளிலும் இலட்சக்கணக்கானோர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் அனர்த்த நிவாரணம் பற்றி எதிர்க்கட்சியினர் அனைவரும் ஓரணியாக இருந்து பேசுவதற்கு தீர்மானித்திருந்தோம்.

மக்கள் பிரதிநிதிகள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கொழும்புக்கு வந்து பாராளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டுள்ளார்கள்.மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு எதிர்பார்த்துள்ளார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியாகிய நாங்கள் எதிரணியாக செயற்படுகிறோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமுள்ளன. மத்திய அரசாங்கத்தின் செயற்திட்டங்களை அமுல்படுத்த எமது உள்ளுராட்சிமன்றங்களும் பங்களிக்க வேண்டும்.

மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு மேலதிகமாக நேரம் ஒதுக்குமாறே கோரியிருந்தோம்.அதற்கு அரசாங்கம் இணங்கவில்லை. இரண்டு நாட்களுக்கு பின்னர் விவாதமில்லாமல் வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தீர்மானித்திருந்தோம்.அதற்கும் அரசாங்கம் இணங்கவில்லை.

மத்திய மாகாணத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டுள்ளார்கள். சில கிராமங்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இது கொலை தயார் நிலையில் இல்லாமல் அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது.இன்றைய (நேற்று) அமர்வில் எதிர்க்கட்சிக்கு 2 மணித்தியாலம் ஒதுக்கப்பட்டால் எமது கட்சிக்கு 5 நிமிடங்களே கிடைக்கும். 8 உறுப்பினர்கள் உள்ளோம். எவ்வாறு எமது மக்கள் பிரச்சினை பற்றி பேசுவது.

பேசுவதற்கு இடமளித்தால் அரசாங்கத்தின் போலியான தன்மை வெளிப்படும் என்று ஆளும் தரப்பு அச்சமடைகிறது.ஆகவே அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
2 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d