அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

தமிழகம்

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள “தித்வா புயல் இன்று மாலை 5.30 மணிக்குள் வலுவிழக்கும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

by Amizhthu 30 November 2025
written by Amizhthu

திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு இன்று (30-11-2025) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

து குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை வட தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் இருந்து 30 கி.மீ தொலைவில் புயல் நிலவக்கூடும்.

டிட்வா புயல் இன்று மாலை 5.30 மணிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது. கரையை கடக்க வாய்ப்பு இல்லை. தற்போது சென்னைக்கு 220 கிலோ மீட்டரிலும், புதுச்சேரிக்கு 130 கிலோ மீட்டரிலும், வேதாரண்யத்திற்கு 120 கிலோ மீட்டர் தொலைவிலும் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.

இன்று (நவம்பர் 30)

திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு இன்று (டிசம்பர் 30) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

ஆரஞ்சு அலெர்ட்

திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நாளை (டிச.,01) திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பலத்த காற்று வீசும்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

5ம் எண் புயல் கூண்டு

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 5ம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
30 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

தித்வா புயல் தாக்கிய இலங்கைக்கு உதவ தமிழகம் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

by Amizhthu 30 November 2025
written by Amizhthu

இலங்கையை புரட்டிப் போட்ட ‘டிட்வா’ புயலுக்கு இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 191 பேர் மாயமாகியுள்ளனர். பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதையடுத்து அங்கு, அவசரநிலையை, அந்த நாட்டின் அதிபர் அநுர குமார திசநாயகே அறிவித்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில், 21 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் 80 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடன் சென்ற நம் விமானப் படைக்கு சொந்தமான விமானம் இலங்கையை அடைந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உதவி செய்து வருகின்றனர். கடற்படை வீரர்களும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை வெள்ளம் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழக அரசு தயாராக உள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

துயருறும் அந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் என மத்திய அரசு மூலம் உதவிக்கரம் நீட்டிட அதிகாரிகள் குழுவை அமைக்கிறோம். அவர்கள் மீண்டெழுந்திடத் துணை நிற்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
30 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

தித்வா புயல் தமிழ்நாட்டை நெருங்கி வருகிறது

by Amizhthu 30 November 2025
written by Amizhthu

தித்வா புயல் சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 160 கி.மீ தொலைவிலும், வேதாரண்யத்தில் இருந்து 100 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
30 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கன மழையால் 9 ஆயிரம் ஹெக்டரில் இளம் சம்பா தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

by Amizhthu 30 November 2025
written by Amizhthu

வங்கக் கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக , மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்த நிலையில் சனி மதியம் முதல் கனமழை வெளுத்து வாங்கியது.

கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றும், உள் பகுதிகளில் மிதமான காற்றும் தொடர்ந்து வீசி வருகிறது. கடலில் 8 அடி உயரம் வரை அலைகள் எழுந்து கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி துறைமுகங்கள், கடற்கரையோர ஆறுகளில் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

கடலோர கிராமங்களிலும், தாழ்வான பகுதிகளிலும், குறுகலான சாலைகளிலும், விளை நிலங்களிலும் நீர் தேங்கியது.

மாவட்ட முழுவதும் விவசாயிகள் 67,993 ஹெக்டரில் சம்பா தாளடி நெற்பயிற் சாகுபடி செய்திருந்த நிலையில் தற்போது இடைவிடாது பெய்து வரும் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு 9 ஆயிரம் ஹெக்டரில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டம் முழுவதிலும் சம்பா தாளடி நெற் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து காற்று மற்றும் மழையின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் வயலில் தேங்கும் தண்ணீரை அவ்வப்போது வடிய வைத்து நெற்பயிர்களுடன், வாழை மற்றும் கரும்பு பயிர்களை பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தலா 31 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சீர்காழியிலும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தரங்கம்பாடியிலும் 2 நாட்களாக முகாமிட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைக்காக மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை சார்பில் மயிலாடுதுறை, சீர்காழி கோட்டங்களில் தலா 30 நீச்சல் வீரர்கள் கொண்ட 2 குழுக்கள் மற்றும் 10 பேர் கொண்ட பாம்பு பிடி வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில் மாவட்ட எஸ்.பி ஸ்டாலின், இக்குழுவினரை சந்தித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மாவட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு அலுவலர் சந்திரகலா தலைமையில் அலுவலர்கள் மாவட்டம் முழுவதிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, நீர் நிலைகளில் உள்ள ஆகய தாமரை செடிகளை அகற்றியும், பொக்லைன் இயந்திரம் மூலம் மழை நீரை வடியச் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் (நவம்பர் 29) மாலை 4.30 மணியுடன் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): மயிலாடுதுறை 84.80, மணல்மேடு 49, சீர்காழி 84.60, கொள்ளிடம் 57.60, தரங்கம்பாடி 61.01, செம்பனார்கோவில் 119.70.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
30 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையில் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய தகவல்களை அறிவிக்க இரண்டு அவசர தொலைபேசி எண்கள் செயல்பாட்டில் உள்ளன.

by Amizhthu 30 November 2025
written by Amizhthu

அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் உடனடியாக தெரிவித்துக் கொள்ள இரண்டு கட்டணமில்லா தொலைபேசி சேவைகள் தற்போது 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுடன் இணைந்துள்ள தேசிய மகளிர் சபையின் 1938 பெண்கள் உதவி அவசர தொலைபேசி இலக்கம்  மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 சிறுவர் உதவி அவசர தொலைபேசி இலக்கங்கள் மூன்று மொழிகளில் இலவசமாக செயல்படுகின்றன.

பெண்கள் தொடர்பான தகவல்களுக்கு – 1938
சிறுவர்கள் தொடர்பான தகவல்களுக்கு – 1929

இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் இன்றியே, 24 மணி நேரமும் அழைத்து தகவல் பகிர முடியும்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, நலன், அவசர உதவி மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இவ்விரு ஹாட்லைன்களும் முக்கிய பங்கு வகிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

தேவைப்படும் தருணங்களில் உடனடியாக தகவல் தெரிவித்து பாதுகாப்புக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
30 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிப்பதற்கான ஒரு விரைவான வழிமுறை.

by Amizhthu 30 November 2025
written by Amizhthu

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதில் வெளிநாடுகள், அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதுடன், மக்களுக்கு நிவாரணங்களை எளிதாகவும் விரைவாகவும் வழங்குவதற்கான விரைவான பொறிமுறையை நிறுவும் நோக்கில் சனிக்கிழமை (29.11.2025) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

சுங்கம் மூலம் பொருள் நன்கொடைகளை விடுவிக்கும் போது பல்வேறு வரி செலுத்துதல்கள், தர ஆய்வுகள் மற்றும் அனுமதிகளைப் பெறுதல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக, முக்கியமாக வரி விலக்குடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு பொறிமுறையின் கீழ் செயற்பட்டு, இந்தப் பொருட்களை விடுவிப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, இந்நாட்டிற்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகள் பலதரப்பு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தகங்கள் மற்றும் தனிநபர்களால் வழங்கப்படும் உதவிகள் என்று நான்கு முக்கிய வகைகளாகப் பிரித்து இனங்காணப்பட்டன.

ஏற்கனவே இலங்கை அரசாங்கம் நாட்டிற்கு அவசரமாகத் தேவைப்படும் பொருட்களின் பட்டியலை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளதுடன், வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் பெறுநராக பெயரிடப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யும்போது, அந்தப் பொருட்களுக்கான சுங்க வரிகள் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) விலக்கு அளிப்பது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இதன் மூலம் பொருள் உதவிகளை செயற்திறனாகவும், முறையான வகையிலும் விடுவிக்க முடியும்.

பொருள் உதவிகளைப் பெறுபவராக இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் பெயரிடப்படவில்லை என்றால், சாதாரண நடைமுறையின் கீழ் வரி செலுத்தி விடுவிக்க வேண்டும்.

அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் திறம்பட அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான முன் ஏற்பாடுகளுடன், இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முகவரி உள்ளிட்ட தகவல்களைக் கொண்ட வழிகாட்டுதல்களை வெளியிடுவதன் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அதன் அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் சுங்க பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட மேற்கொள்ளவுள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, ஜனாதிபதியின் சிரேஷ்டமேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே மற்றும் ரஸ்ஸல் அபோன்சு மற்றும் இலங்கை சுங்கம் உட்பட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பற்கேற்றனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
30 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கை ஜனாதிபதி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சிறந்த ஒருங்கிணைப்பு பராமரிக்கப்பட வேண்டும்.

by Amizhthu 30 November 2025
written by Amizhthu

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செயற்திறனுடனும் வழங்க முடியும் என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

(29-11-2025) இரவு முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த கடினமான நிலைமையில் மக்களுக்காக முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் நன்கு ஒருங்கிணைந்து பணியாற்றி, மனசாட்சிப்படி எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய அர்ப்ணிப்புடன் செயற்படுவோம் என்று அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

மேலும், எந்தவித பாகுபாடும் இன்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான வசதிகளை வழங்கி அவர்களின் உயிர்களுக்கு மதிப்பு கொடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த கடினமான நிலைமை, நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முப்படைகளின் ஆதரவுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், இடம்பெயர்ந்தவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல், மீண்டும் இயல்பு வாழ்வை மீட்டெடுத்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை அனைவரின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி, ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமது அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் செயற்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து கலந்து கொண்ட பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். மேலும், தமது பங்களிப்புகளைப் பாராட்டி இந்தக் கலந்துரையாடலுக்கு அழைத்ததற்காக அவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், இதுபோன்ற தேசிய சந்தர்ப்பங்களில் அரச சார்பற்ற அமைப்புகளின் நிதி உதவியை மாத்திரமன்றி, அவர்களின் அனுபவம் மற்றும் திறன்களையும் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளையும் இங்கு அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், இது பொருளாதார ரீதியாக நாட்டிற்கு கடினமான நிலைமை என்றாலும், இலங்கையில் நிலவும் தார்மீக விழிப்புணர்வு காரணமாக இந்த சவாலை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும், தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஊழல் மற்றும் மோசடி அற்ற வேலைத்திட்டத்தின் காரணமாக, அரசாங்கத்துடன் அச்சமின்றி பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, மற்றும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பலருடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
30 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

இந்தியாவின் நிலப்பரப்பில் 61 சதவீதம் நிலநடுக்க அபாயத்தில்.

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

இமயமலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்தியாவின் நிலப்பரப்பில் 61 சதவீதம் நிலநடுக்க அபாயத்தில் இருப்பதாக இந்திய தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள இந்தியாவின் நிலநடுக்கம் அபாயமுள்ள பகுதிகளின் புதிய வரைபடம் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரைபடத்தில் இந்தியாவில் உள்ள 61 சதவீதம் நிலப்பரப்புகளில் மிதமான முதல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும் மண்டலம் IV மற்றும் Vல் இருந்த இமயமலை, தற்போது மண்டலம் VIல் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒட்டுமொத்த இமயமலை பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்த இமயமலையும் ரொம்ப ஆபத்தானது என்ற பிரிவுக்குள் வந்துள்ளது.

பூமிக்கு அடியில் இந்திய தட்டு ஒவ்வொரு ஆண்டும் 5 செ.மீ., வரை மேல்நோக்கி நகர்கிறது. யூரேசியத் தட்டுடன் இடைவிடாமல் மோதுவதால் தான், இமயமலையை இன்னும் உயரமாக்குகிறது. நகர்ப்புறங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், பிஐஎஸ் வெளியிட்டுள்ள இந்தப் புதிய வரைபடம் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது.

எனவே, இமயமலைக்கு அடிவாரத்தில் இருக்கும் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் போன்ற நகரங்களை இன்னும் கூடுதல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாலங்கள், வீடுகள் போன்ற கட்டுமானங்களை, நிலநடுக்கத்தை தாங்கும் மாதிரியானவையாக அமைக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

வவுனியாவில் 3598 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 47’இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

வவுனியாவில் ஏற்ப்பட்ட வெள்ளப்பேரிடர் காரணமாக 1118 குடும்பங்களை சேர்ந்த 3598 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 47இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 599 குடும்பங்களை சேர்ந்த 1997 பேர் 21 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பிரதேச செயலகபிரிவில் 191 குடும்பங்களை சேர்ந்த 605பேர் 8 முகாம்களிலும், வவுனியா வடக்கில் 172 குடும்பங்களை சேர்ந்த 519 பேர் 10முகாம்களிலும், வவுனியா தெற்கில் 156 குடும்பங்களை சேர்ந்த477 பேர்8 முகாம்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சமைத்த உணவுகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு,பிரதேச செயலகம்,ஏனைய தனவந்தர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை வெள்ளம் வடியாத தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் அதிகமான மக்கள் தங்களது உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

அதிக நீர்வரத்து காரணமாக மாவட்டத்தில் உள்ள83 குளங்களில் சேதம் ஏற்ப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

நேற்று மாலையின் பின்னர் வவுனியாவில் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளது. இதனால் தடைப்பட்டிருந்த பிரதான வீதிகள் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

வட தமிழகத்தை நோக்கி தித்வா புயல் நகர்கிறது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா அளித்த பேட்டி:

சென்னை நகர், புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், காரைக்காலில் 5ம் எண் புயல் சின்னம் ஏற்றப்பட்டுள்ளது. நாளை மறுதினம் டிட்வா புயல் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

இன்று தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை என 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

சென்னைக்கு அருகே 350 கி.மீ துாரத்தில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு வட தமிழகத்தை நெருங்கும். நாகை மாவட்டத்தில் மிக மிக அதிக மழை பெய்துள்ளது. கோடியக்கரையில் 25. செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையிலான கடந்த 7 மணி நேரத்தில் நாகையில் 11 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. காரைக்காலில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

காற்றின் வேகம்

புயல் தாக்கம் காரணமாக, வட தமிழகத்தில் இன்று தரைக்காற்று 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். டெல்டா மாவட்டங்களில் 80 கி.மீ வேகத்திலும், சென்னையில் 75 கி.மீ வேகத்திலும் தரைக்காற்று வீசலாம்.

நாளை மாலை சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டின் கடற்கரைக்கு 25 கி.மீ வரை டிட்வா புயல் நெருங்கி வரும். செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம்,கடலுார் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சென்னையில் நாளை 60 கி.மீ. முதல் 70 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

டிசம்பர் 1 முதல் மழை படிப்படியாக குறையக்கூடும். – இவ்வாறு அமுதா கூறினார்.

விலகியது
புயல் தற்போது இலங்கையை விட்டு முழுவதும் விலகியுள்ளது. சனி மாலை 5 மணி நிலவரப்படி யாழ்ப்பாணத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையில் சீரற்ற வானிலை; எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, சுத்தமான நீரை பயன்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வித்துள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

🌪️ இலங்கை மீது தாக்கிய தித்வா புயல் – இதுவரை தெரிந்தவை

by Amizhthu 29 November 2025
written by Amizhthu
  • உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனோர்: கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் குறைந்தது 123 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 130 பேர் காணாமல் போயுள்ளனர்.
  • இடம்பெயர்ந்தோர்: 1,02,000 குடும்பங்களைச் சேர்ந்த 3,73,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில் 44,000 குடும்பங்கள் அவசர முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
  • அடிப்படை வசதிகள் பாதிப்பு: வீடுகள் இடிந்து, முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டுள்ளன; ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 30% மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, நீர்மின் நிலையங்கள் செயலிழந்துள்ளன.
  • போக்குவரத்து தடைகள்: கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் மாற்றப்பட்டன; நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். பள்ளிகள் மூடப்பட்டன.
  • அரசின் நடவடிக்கை: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவசர நிலையை அறிவித்துள்ளார். இராணுவம், கடற்படை, காவல்துறை மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
  • சர்வதேச உதவி: இந்தியா உணவுப் பொருட்களை அனுப்பி, கூடுதல் உதவியையும் உறுதியளித்துள்ளது. இலங்கை உலகளாவிய உதவியை கோரியுள்ளது.
  • புயலின் பாதை: வங்காள விரிகுடாவில் உருவான புயல் தற்போது இலங்கையை விட்டு விலகி, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் நோக்கி நகர்கிறது. அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

📌 பின்னணி

2025 வடஇந்தியப் பெருங்கடல் புயல் பருவத்தின் ஓர் அங்கமாகிய தித்வா புயல், யேமனின் Detwah Lagoon பெயரில் அழைக்கப்படுகிறது. இது நவம்பர் 27–28 அன்று இலங்கையின் கிழக்கு கரையை தாக்கியது. 24 மணி நேரத்தில் 300 மில்லிமீட்டர் மழை பெய்து, 2016க்குப் பிறகு மிகக் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தியது.

இப்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள்: அணுக முடியாத பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் தொடர்பு வலையமைப்புகளை மீண்டும் நிறுவுதல். வெள்ளத்தில் நாரிழை கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. புயல் இந்தியாவை நோக்கி நகரும் நிலையில், அடுத்த சில நாட்களில் மேலும் கனமழை பெய்யும் அபாயம் உள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d