எங்கள் சூரியப் புதல்வர்கள்
தங்கள் உயிர்களை
எம் தேசத்திற்காய் உவந்தளித்தவர்
இன்றோ!
தொலை வானில் செந்நிறமாய்
தேசியக்கொடியில் சுடராக எரிந்து
எமக்கான வல்லமை தருகின்றார்.
செங்காந்தள் மலரும்
செங்களமாடிய புனிதரின் கனவுகளை
சுமந்து சொரியட்டும்.
களத்திடை வீரர் சுமந்த கனவுகளை
வென்றாகி
தமிழீழம் மீட்பது இளையோரின் உரிமையும் கடமையும்.
TYO-UK – TCC.UK