சீனாவின், டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்ட மூன்று விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வர, ‘ஷென்சோ 22’ என்ற விண்கலம் வெற்றிகரமாக புறப்பட்டது.

அமெரிக்கா உருவாக்கிய ஐ.எஸ்.எஸ்., எனப்படும், சர்வதேச விண்வெளி நிலையத்தை தவிர, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் தனி விண்வெளி நிலையங்களை வைத்திருக்கின்றன.

‘ டியாங்கோங்’ என்று அழைக்கப்படும் சீன விண்வெளி நிலையத்தை ஆய்வு செய்வதற்காக ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீரர்கள் செல்வது வழக்கம்.

அதன்படி, ‘ஷென்சோ — 20’ விண்கலம் வாயிலாக கடந்த மே 3ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று வீரர்கள் பயணம் மேற்கொண்டனர்.

ஆனால், அவர்கள் திரும்பவேண்டிய விண்கலம் சேதமடைந்து பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், கடந்த 1ம் தேதி, ‘ஷென்சோ — 21’ என்ற விண்கலம் மாற்று ஏற்பாடாக அனுப்பி வைக்கப்பட்டு மூவரும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரப்பட்டனர்.

‘ஷென்சோ — 21’ விண்கலம் மூன்று வீரர்களை, விண்வெளி நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு மூன்று வீரர்களை பூமிக்கு அழைத்து வந்தது. இதனால், ‘ டியாங்கோங்’ விண்வெளி நிலையத்தில் தற்போது இருக்கும் வீரர்கள் பூமி திரும்புவதற்கு விண்கலம் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதற்கு மாற்று ஏற்பாடாக ஒரே மாதத்தில், ‘ஷென்சோ — 22’ என்ற விண்கலத்தை சீனா உருவாக்கியது.

இந்த விண்கலம், நேற்று ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து, ‘லாங் மார்ச்- 2எப்’ ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Related posts

மனித வாழ்க்கை – ஐந்தாம் நாள்

கரும்புலிகள் நாள் 2026 பெல்சியம்

ILC தமிழ் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி மக்கள் வானொலி வழங்கும் இன்னிசைக் குரல் பாடல் போட்டி 2026