தமிழினத்தின் விடுதலைத் தீ!
என்றென்றும் எங்களின் வழிகாட்டி
தமிழர்களின் வாழ்வில் ஒளியூட்டிய எரிமலை நெருப்பே!
புரட்சி என்ற சொல்லுக்குப்
புது அர்த்தம் கொடுத்த புறநானூற்று வீரனே!
முப்படைகள் கட்டி தமிழர் தேசம் காத்த காவல் தெய்வமே!
பிரபாகரன் என்ற பெயர் கேட்டதால் தானே வல்லரசு நாடுகளும் கதிகலங்கி நின்றன!
சுயநலம் கொண்ட அண்டை நாடுகளின் நயவஞ்சகத்தில் சிக்காது தன் இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக போர் களத்தினில் குதித்த நம் கரிகாலனை நாம் வணங்குகின்றோம்.
தமிழுக்கு “ழ”அழகு
தமிழினத்துக்கு எங்கள் வல்வெட்டி வீரனே அழகு!
தன்னிகரில்லா தானைத் தலைவன் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு 71வது அகவை நல் வாழ்த்துக்கள்
அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு