தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் முயற்சிகளை அமெரிக்கா ஆதரிக்கிறது. – அமெரிக்கத் தூதுவர்.

தித்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து துணை நிற்கிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் 20,000 பாலிசாக்குகளை கையளித்தது. இந்த பாலிசாக்குகள் கரைகளை வலுப்படுத்தவும், வெள்ள நீரின் வேகத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

சமீபத்தில் தகவல் தொடர்பு உபகரணங்களை அமெரிக்கா கையளித்ததன் தொடர்ச்சியாக இந்த உதவி அமைந்துள்ளது.

மேலும், இத்தகைய சவாலான நேரத்தில் எங்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது. வரும் வாரங்களில், ஜெனரேட்டர்கள், சமையல் அடுப்புகள், நீர் தொட்டிகள் மற்றும் கூடாரங்கள் ஆகியவற்றையும் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து நாங்கள் வழங்குவோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!