இந்தியாவின் நிலப்பரப்பில் 61 சதவீதம் நிலநடுக்க அபாயத்தில்.

பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள இந்தியாவின் நிலநடுக்கம் அபாயமுள்ள பகுதிகளின் புதிய வரைபடம் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரைபடத்தில் இந்தியாவில் உள்ள 61 சதவீதம் நிலப்பரப்புகளில் மிதமான முதல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும் மண்டலம் IV மற்றும் Vல் இருந்த இமயமலை, தற்போது மண்டலம் VIல் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒட்டுமொத்த இமயமலை பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்த இமயமலையும் ரொம்ப ஆபத்தானது என்ற பிரிவுக்குள் வந்துள்ளது.

பூமிக்கு அடியில் இந்திய தட்டு ஒவ்வொரு ஆண்டும் 5 செ.மீ., வரை மேல்நோக்கி நகர்கிறது. யூரேசியத் தட்டுடன் இடைவிடாமல் மோதுவதால் தான், இமயமலையை இன்னும் உயரமாக்குகிறது. நகர்ப்புறங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், பிஐஎஸ் வெளியிட்டுள்ள இந்தப் புதிய வரைபடம் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது.

எனவே, இமயமலைக்கு அடிவாரத்தில் இருக்கும் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் போன்ற நகரங்களை இன்னும் கூடுதல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாலங்கள், வீடுகள் போன்ற கட்டுமானங்களை, நிலநடுக்கத்தை தாங்கும் மாதிரியானவையாக அமைக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.