இலங்கை, மொரகஹஹேன பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது.

பாணந்துறை பிரதேச குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் நேற்று (04-12-2025) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 1062 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தம்பர மில்லேவ பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மொரகஹஹேன பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

இலங்கையில் பண்டாரவளை குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்!

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!