Wednesday, April 1, 2026

இந்திய ராணுவத்தினர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம். – இந்திய பிரதமர் அழைப்பு

0 comments

ராணுவத்தினர் கொடி நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது ராணுவ வீரர்களுக்கு நமது ஒற்றுமையை வெளிப்படுத்தவும், ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கும் வாய்ப்பை அளிக்கிறது.

இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: ராணுவத்தினர் கொடி நாள் தினம் முன்னிட்டு, நமது தேசத்தை அசைக்க முடியாத துணிச்சலுடன் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு மற்றும் மனப்பான்மை நமது மக்களைப் பாதுகாக்கிறது. நமது தேசத்தை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பு நமது தேசத்தின் மீதான கடமை, ஒழுக்கம் மற்றும் பக்திக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு. ராணுவத்தினர் கொடி நாள் நிதிக்கு அனைவரும் பங்களிப்போம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00