தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தேசியத்தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைக்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுசுமந்த அடிக்கற்கள் எழுச்சி நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் மாவீரர் பணிமனையால் டுயிஸ்பேர்க் நகரில் நினைவு கூரப்பட்டது.
👇பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 👇
நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாகப் பொதுச்சுடர்; ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதுடன் 18 அடிக்கற்கள் நாயகர்களின் திருவுருவப் படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 18 அடிக்கற்கள் நாயகர்களின் திருவுருவப் படங்களுக்கு மக்கள் மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் செலுத்தினர்.
- “தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி” சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது.
- மருமகனால் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் கண்டுபிடிப்பு!
- இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து: உலக பொருளாதாரத்தில் புதிய அத்தியாயம்
- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் 18ம் தேதி ஈரோட்டில் பிரசாரம் செய்ய உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
- மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு..!
- புளோரிடாவின் டம்பாவில் ஒரு கட்டிடத்திற்கு வெளியே ஒரு கார் கூட்டத்தின் மீது மோதியதில் நான்கு பேர் இறந்தனர், குறைந்தது 13 பேர் காயமடைந்தனர்
நிகழ்வில் எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் மற்றும் சிறப்புப் பேச்சு ஆகியன இடம்பெற்றதோடு அடிக்கற்கள் நாயகர்களின் நினைவைத் தாங்கிய வரலாற்றுத் தொகுப்பு நூல் ஒன்றும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி கையேந்தப்பட்;டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி