தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1ம் நாளையும், ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்ட அண்ணாதுரை சட்டசபையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.
- கிஷ்த்வார் மலைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை: ஏழு ராணுவ வீரர்கள் காயம்
- திராவிட-தமிழ் தேசிய போரில் வெல்ல போவது யார்? செந்தமிழன் சீமானுடன்…
- இலங்கையில், வடக்கு நோக்கிய ரயில் சேவைகள் நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்கும் – ரயில்வே திணைக்களம்
- கொடிகாமம் குளத்தில் இளைஞர் மர்மமான முறையில் இறந்தது குறித்து புதிய விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
- தமிழர் தரப்பின் கவலைகளை இன்று அரசாங்கத்திடம் முன்வைப்பேன் – நோர்வேயின் துணை வெளியுறவு அமைச்சர்
- சீமான் – ஸ்டாலின் சந்திப்பு ! தற்செயலா ? அரசியலா ? அவதூறுகளா ?
தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழகம் உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்