இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக “ஆதரய” எனும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இத்திட்டம் பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்த திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை திங்கட்கிழமை (08-12-2025) ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கொட்டகலை சி.எஃப்.எல். இடம்பெறும் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கருப்பையா ராமகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டு கல்வி நடவடிக்கைக்கான பொருட்களை நன்கொடையாக வழங்கவுள்ளனர்.

குறித்த பகுதியில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் இருந்தால் ஏனையவர்கள் தெரியப்படுத்தி, இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

இலங்கையில் பண்டாரவளை குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்!

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!