யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (16-12-2025) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் திங்கட்கிழமை (15-12-2025) தாவடி பகுதியில் 2வது மாடியில் வேலை செய்தபோது தவறி 1வது மாடியில் விழுந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (16-12-2025) மதியம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related posts

சுதந்திரத்தை விரும்புவோருக்கு, உறுதியே வலிமையான ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தராகப் பதவியேற்றார்.

யானைகள் வேண்டுமென்றே யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.