யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (16-12-2025) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் திங்கட்கிழமை (15-12-2025) தாவடி பகுதியில் 2வது மாடியில் வேலை செய்தபோது தவறி 1வது மாடியில் விழுந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (16-12-2025) மதியம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related posts

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் இரத்தக் கறை

பிரிகேடியர் சொர்ணம் : தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் “எதிர்த்தாக்குதல் தளபதி” — தமிழ் மக்களின் வீரம், நிமிர்வு மற்றும் அடங்காச் செருக்கின் அடையாளம்