ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை தமிழர் என்ற அடையாளம் முழுமை அடையும் என்பதை அமரர் பெருமாள் கணேசன் நம்பினார். கணேசன் கொள்கையும் அதுதான் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஓய்வுபெற்ற அதிபரான அமரர். பெருமாள் கணேசனின் இறுதிக் கிரியையில் கலந்துகொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.