யேர்மனியில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்.

தேசத்தின் குரல் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம்  அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நெற்ரெற்றால் நகரில் எழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.

நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாகப்  பொதுச்சுடர்; ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தேசத்தின் குரல் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம்  அவர்களின திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் இடம்பெற்றது.

நிகழ்வில் கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் மற்றும் சிறப்புப் பேச்சு ஆகியன   இடம்பெற்றன. இந்நிகழ்வைச் சிறப்பித்த கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அன்னை பூபதி நினைவு தினம் / நாட்டுப்பற்றாளர்கள் நினைவு தினம் – பிரான்ஸ் 2026

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.