யேர்மனியில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்.

தேசத்தின் குரல் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம்  அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நெற்ரெற்றால் நகரில் எழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.

நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாகப்  பொதுச்சுடர்; ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தேசத்தின் குரல் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம்  அவர்களின திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் இடம்பெற்றது.

நிகழ்வில் கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் மற்றும் சிறப்புப் பேச்சு ஆகியன   இடம்பெற்றன. இந்நிகழ்வைச் சிறப்பித்த கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

Related posts

சிங்கள கைக்கூலி, தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி!

நீதியை நோக்கிய பேரணி – லண்டன்

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.