இலங்கையின் தெஹிவளை கடற்கரை சாலையில் துப்பாக்கிச் சூடு – ஹோட்டல் உரிமையாளர் காயம்.

தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்பாக 09’ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதில் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார்.

ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக் கொண்டிருந்த இரு நபர்கள், ஹோட்டல் உரிமையாளரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!