இலங்கை காவல்துறைத் தலைவர் கடும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்: நாடு தழுவிய சோதனைகள்; ஒரே நாளில் 596’க்கும் மேற்பட்டோர் கைது!

அதற்கமைய, 30,386 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 18 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 268 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 184 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 467 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 72 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,584 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு