இலங்கை காவல்துறைத் தலைவர் கடும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்: நாடு தழுவிய சோதனைகள்; ஒரே நாளில் 596’க்கும் மேற்பட்டோர் கைது!

அதற்கமைய, 30,386 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 18 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 268 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 184 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 467 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 72 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,584 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரும்புலிகள் நாள் 2026 பெல்சியம்

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு யூலை கவனயீர்ப்புப் போராட்டம்

மனித வாழ்க்கை – நான்காம் நாள்