Wednesday, April 1, 2026

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது!

0 comments

அனுமதிப் பத்திரமன்றி சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் செவ்வாய்க்கிழமை (27-01-2026) கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கையானது சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் வைத்து சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஒரு டிப்பர் வாகனம் தப்பித்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மணல் கிளாலி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட போதே இவ்வாறு கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00