காலி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தகராறு செவ்வாய்க்கிழமை (27-01-2026) இரவு ஏற்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவர்களான “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகாக்களுக்கும் “அகமிபொடி அஜித்” என்பவரின் சகாக்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகா ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

இலங்கையில் பண்டாரவளை குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்!

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!