சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் வரும் 6 ஆம் தேதி தொடங்கும். – தமிழக வெற்றிக் கழகம்

இது தொடர்பாக, அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:

வரும் சட்டசபை தேர்தலுக்கு, 234 தொகுதிகளிலும், த.வெ.க., சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு கொடுக்கலாம். பனையூர் அலுவலகத்தில், நாளை மறுநாள் முதல் 14ம் தேதி வரை, மனுக்கள் வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

‘நான் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு, எல்லாரும் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும்’ என, விஜய் அழுத்தமாக சொல்லி வருகிறார். எனவே, வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்து விட்டதாக தெரிகிறது.

எனினும், அனைத்து கட்சிகளையும் போல், விருப்ப மனு வினியோகத்தை கட்சி தலைமை துவக்குகிறது. ஒவ்வொரு தொகுதியிலும், விஜய் பெயரில், குறைந்தது 50 மனுக்களையாவது வாங்க வேண்டும் என, கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு