இலங்கை: காலி சிறைச்சாலையில் திடீர் சோதனை; சட்டவிரோத பொருட்கள் பறிமுதல்!

காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கைதிகளிடம் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல சட்டவிரோத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது மொத்தமாக 19 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இதனுடன், 4 கிராம் 384 மில்லிகிராம் எடையுடைய 58 ஹெரோயின் பொட்டலங்களும், 106 கிராம் 350 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன