இலங்கை: காலி சிறைச்சாலையில் திடீர் சோதனை; சட்டவிரோத பொருட்கள் பறிமுதல்!

காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கைதிகளிடம் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல சட்டவிரோத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது மொத்தமாக 19 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இதனுடன், 4 கிராம் 384 மில்லிகிராம் எடையுடைய 58 ஹெரோயின் பொட்டலங்களும், 106 கிராம் 350 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிங்கள கைக்கூலி, தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி!

நீதியை நோக்கிய பேரணி – லண்டன்

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.