‘சந்திரயான்-4’ திட்டத்திற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.

‘சந்திரயான் – 4’ திட்டத்துக்கு இன்னும் இரு ஆண்டுகள் உள்ள நிலையில், நிலவின் தென் துருவப் பகுதியில் விண்கலம் தரையிறங்குவதற்கான இடத்தை, ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடையாளம் கண்டுள்ளது.

‘சந்திரயான் – 3’ திட்ட வெற்றியைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள, ‘இஸ்ரோ’ முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு, ‘சந்திரயான் – 4’ என பெயரிடப்பட்டது. ஆனால் இது, ‘சந்திரயான் – 3’ போலல்லாமல், நிலவின் மண்ணை சேகரித்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் திட்டம்.

‘சந்திரயான் – 4’ திட்டத்தில், உந்துவிசை தொகுதி, தரையிறங்கும் தொகுதி, மேலே றும் தொகுதி, மாற்றும் தொகுதி, மீண்டும் நுழைவு தொகுதி – -இது மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பும் ஆகியவை இடம் பெற உள்ளன. 2028ல், ‘சந்திரயான் – 4’ திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ள நிலையில், மத்திய அரசும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், ‘சந்திரயான் – 4’ திட்டத்தில், நிலவின் தென் துருவப் பகுதியில் விண்கலம் தரையிறங்குவதற்கான இடத்தை இஸ்ரோ அடையாளம் கண்டுள்ளது.

நில வின் தென் துருவத்தில் உள்ள எம்.எம்., எனப்படும், ‘மான்ஸ் மவுட்டன்’ என்ற பகுதியில் இந்த விண்கலம் தரையிறங்க உள்ளது. இ தற்காக நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், எம்.எம்., 4 என்ற இடத்தை இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

Related posts

இடன் கார்டன்ஸில் இங்கிலாந்தின் துல்லிய வெற்றி: ஸ்காட்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

இந்தியப் பிரதமர் மோடியின் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கியது.

வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, கொல்கத்தா-ஷில்லாங் விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.