ஏப்ரல் 2027 முதல் இந்தியாவில் புதிய வாகன சோதனை முறை.

இந்தியா

மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சகம், ‘மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ல் திருத்தம் செய்து, புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘2027, ஏப்., 1 முதல், ‘எம் – 1’ மற்றும் ‘எம் – 2’ பிரிவுகளில் உள்ள ‘பி.எஸ்., 6’ எனப்படும், ‘பாரத் ஸ்டேஜ் – 6’ வாகனங்களின் உமிழ்வு தரநிலைகள், ‘டபிள்யூ.எல்.டி.பி.,’ என்ற உலகளாவிய ஒருங்கிணைந்த இலகுரக வாகன சோதனை நடைமுறை படி அளவிடப்படும்’ என, திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

‘எம் – 1’ பிரிவில், எஸ்.யூ.வி., ஹேட்ச்பேக், செடான், எம்.பி.வி., உள்ளிட்ட கார்களும், ‘எம் – 2’ பிரிவில், எட்டுக்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட பயணியர் வாகனங்களும் அடங்கும். தற்போது வரை, இந்த வாகனங்களில், ‘எம்.ஐ.டி.சி.,’ என்ற இந்திய வாகன சோதனை முறையின் படி, புகை உமிழ்வு சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய யூனியன், 2018 முதல் கடைப்பிடிக்கும், உலகளாவிய ஒருங்கிணைந்த இலகுரக வாகன சோதனை நடைமுறை, இந்தியாவில் கொண்டு வந்தால், பி.எஸ்., – 6 வாகனங்களின் விலை உயர்ந்து, மைலேஜ் குறையும் என்கின்றனர் வாகன நிபுணர்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

புதிய வாகன சோதனை முறை மூலம், உலகளாவிய தரநிலைக்கு நிகரான மைலேஜ் மற்றும் உமிழ்வு வெளியேற்றத்தை துல்லியமாக கண்டறிய முடியும். தற்போது உள்ள வாகன சோதனை, சிறிய இன்ஜின், மேனுவல் கியர்பாக்ஸ், குறைந்த பவர் வழங்கும் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த கார்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில், 31 கி.மீ., சராசரி வேகத்தில், 20 நிமிடம், 11 கி.மீ.,க்கு மட்டும் கார்கள் சோதனை செய்யப்படுகின்றன.

ஆனால், இந்த புதிய சோதனை முறையில், 46.5 கி.மீ., சராசரி வேகத்தில், 30 நிமிடம், 23 கி.மீ., துாரத்திற்கு, வெவ்வேறு வேகங்களில் சோதனை செய்யப்படுவதால், கார்களின் மைலேஜ் 10 முதல் 20 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல், கடும் சோதனையால், உமிழ்வு வெளியேற்றமும், 15 முதல் 25 சதவீதம் வரை உயரும் வாய்ப்பு உள்ளது. இதனால், அதிக மைலேஜ் வழங்குவதற்காகவும், உமிழ்வுகளை குறைக்கவும், கார்களை மேம்படுத்த வேண்டிய தேவை நிறுவனங்களுக்கு ஏற்படும். இதனால், கார்க ள் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்