ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை என்ற பெயரில் மோசடி குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அது, தங்கள் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டவை அல்ல என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பணம் என்பவற்றை வாட்ஸ்அப் அல்லது வேறு சமூக ஊடகங்களினூடாக   கேட்பதில்லை.

எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான போலி இணைப்புக்களுக்கு, உங்கள் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓ.டி.பி இலக்கம் மற்றும் வங்கி அட்டை விவரங்களைப் பகிர வேண்டாம்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ தொலைபேசி, வலைத்தளங்கள், செயலிகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் மட்டுமே நிறுவனம் மற்றும் அதன் சலுகைகள் குறித்து அறியமுடியும் என தெரிவித்துள்ளது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு