ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை என்ற பெயரில் மோசடி குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அது, தங்கள் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டவை அல்ல என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பணம் என்பவற்றை வாட்ஸ்அப் அல்லது வேறு சமூக ஊடகங்களினூடாக   கேட்பதில்லை.

எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான போலி இணைப்புக்களுக்கு, உங்கள் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓ.டி.பி இலக்கம் மற்றும் வங்கி அட்டை விவரங்களைப் பகிர வேண்டாம்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ தொலைபேசி, வலைத்தளங்கள், செயலிகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் மட்டுமே நிறுவனம் மற்றும் அதன் சலுகைகள் குறித்து அறியமுடியும் என தெரிவித்துள்ளது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.