இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை, எதிர்வரும் 20ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இந்த விடயம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று புதன்கிழமை (18-02-2026) அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் விசாரணை தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக மைத்திரி விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

காதி நீதிபதி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை எதிர்வுகூறியுள்ளது.

இலங்கை ரயில் ஓட்டுநர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.