இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை, எதிர்வரும் 20ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இந்த விடயம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று புதன்கிழமை (18-02-2026) அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் விசாரணை தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக மைத்திரி விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!