சர்வதேசச் செய்திகள் புலம்பெயர் தமிழர்கள் முதன்மை செய்திகள் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 15 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம் Amizhthu27 February 202608 views மனித நேய ஈருருளிப்பயணத்தின் 15வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. 26/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பாஷல் நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் இன்று மாலை சுவிஸ் சொலத்தூண் நகரில் நிறைவுபெற்றது. தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு 27.02.2026 காலை இலக்கு நோக்கி பயணிக்கும். “எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது“ -தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன். “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”