இன்று முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் எனதன்பு தம்பி – தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
தேர்வினை நீங்கள் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையமால், முழுமையான நம்பிக்கையுடன் நீங்கள் துவங்கும் எந்தவொருச் செயலும் பாதி வெற்றி பெற்றதற்குச் சமமாகும். எனவே, என் அன்பிற்கினிய மாணவக்கண்மணிகள் அனைவரும் அச்சமின்றி தேர்வெழுதுங்கள்!
உறுதியாக வெற்றிப்பெறுவீர்கள்!
உங்கள் அனைவருக்கும் அன்பும், வாழ்த்துகளும்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
