“234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஐந்து நாட்களுக்கு மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும்” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

by
0 comments

சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று அளித்த பேட்டி:

தமிழகத்தில் மார்ச் 15 நிலவரப்படி, 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், பெண் வாக்காளர்கள் 2.90 கோடியும், ஆண் வாக்காளர்கள் 2.78 கோடியும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,656 பேரும் உள்ளனர்.

அறிவுறுத்தல்: தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க, 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு ஓட்டுச்சாவடிகளில் சிறப்பான அனுபவத்தை வழங்குவதற்காக, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன; மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

வேட்பு மனு தாக்கல், வரும் 30 முதல், ஏப்ரல் 6 வரை நடக்க உள்ளது. இதில், பொது விடுமுறை போக, ஐந்து நாட்கள் மட்டுமே மனுக்கள் பெறப்படும். காலை 11:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை மனுக்கள் அளிக்கலாம். உரிய ஆவணங்கள் இருந்தால், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.

வாகன சோதனையின்போது, பொது மக்களை தொந்தரவு செய்யக்கூடாது என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் 3.50 லட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது; இரண்டாம் கட்ட பயிற்சி நடந்து வருகிறது.

வாகன சோதனையின்போது நேற்று காலை வரை, 1.26 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. காலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படும். பிரசாரங்களுக்கு, ‘ஆன்லைன்’ வாயிலாகவே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட, 50 பிரிவு துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் வரவுள்ளனர்.

பணப் பரிவர்த்தனைகள் பிரசாரத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் கூடும் இடங்களில், குடிநீர் வசதி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கையாள, அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்படும். ஆன்லைன் வழியாக நடக்கும் மொத்த பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும். – இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ஸ்ரீதர், சிவஞானம் உடன் இருந்தனர்.

3 நாள் விடுமுறை வரும் 30ம் தேதி துவங்கி, ஏப்ரல் 6 வரை வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. அதன்படி, மனு தாக்கல் செய்ய, மொத்தம் எட்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதில், வரும் 31ம் தேதி மஹாவீர் ஜெயந்தியை ஒட்டி, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 3ம் தேதி புனித வெள்ளியன்றும் அரசு விடுமுறை. மேலும், ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அரசு பொது விடுமுறை நாள். இந்த மூன்று நாட்களை தவிர்த்து, ஐந்து நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், ஆறு நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ஒரு நாள் குறைந்துள்ளது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00