புத்தக வடிவில் படிக்க, இங்கே சொடுக்கவும்.
eBooks
👇படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👇
அபிராமிப்பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தளம் திருக்கடையூராகும். ஒருபாடலின் முடிவு அடுத்த பாடலுக்கு துவக்கமாக அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்.
பாரத பழம் பெரும் பூமியில் சக்தி வழிபாடு என்பது அனைத்துக்கும் மேலான பரம்பொருள் வழிபாடு.சக்தி வழிபாட்டில் பேரொளியாய்த் திகழ்ந்தவர் “அன்னை ஆட்கொண்ட அபிராமி பட்டர்”
அன்னையின் ஸஹஸ்ர தள த்யானத்தில் ஆழ்ந்திருந்த பட்டர் சரபோஜி மன்னனின் அன்றைய திதி பற்றிய வினாவுக்கு நிலவுததும்பும் அம்மையப்பனைக் கருதி பௌர்ணமி என்று பதிலிறுத்தார். ஸஹஜ நிலை திரும்பியவுடன் தவறுணர்ந்து இதுவும் அன்னை செயலே அன்னையே சரி செய்யட்டு மென்றே அந்தாதி பாடலானார்.
அபிராமி தாஸன் என்று அன்போடு அழைக்கப்படும் திரு மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் “அபிராமியும் லலிதையும்” உரை என் முயற்சிக்கு பெரிதும் உதவிற்று. அத்புத ஓவியர் திரு கேஷவ் வெங்கடராகவன் அவர்களின் ஓவியங்கள் என் எழுத்துக்கு மிகுந்த உற்சாகம் கொடுத்தன. முக நூலில் இதை எழுதியபோது நண்பர்கள் பலரும் உற்சாகமளித்து ஊக்குவித்தனர்
என்னைக் கவர்ந்த என் சித்தமுறை அபிராமியே ஆணையிட்டு தொடர்ச்சியாய் எளிய தமிழில் எழுத தூண்டுவித்தாள் குறையெனதாம் நிறை என்னம்மையுடையதாம். குறை பொறுத்து நிறை மகிழ்ந்து பொருத்தருள வேண்டுகிறேன்
இதனை மின் வடிவம் செய்ய பொறியாய் இருந்து வழியும் காட்டிய திரு என். சொக்கன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். திரு டி. ஸ்ரீநிவாசன் அவர்களின் முயற்சிக்கு என் வணக்கங்கள்.
அன்னை அபிராமி அனைவருக்கும் அருள் புரிய இறைஞ்சுகிறேன்
ஓம் ஸ்ரீ மாத்ரே நம:
ஜவஹர் கண்ணன்
👇படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
(திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம்)
திருமூலர் அருளிய அட்டாங்க யோகத்தின் மூலம், வானுலக தேவர்களை விட மேலான ஆனந்தத்தை அடைய முடியும் என்று கூறப்படுகிறது.
திருமூலரால் அருளப்பட்ட இந்த நூல், அட்டாங்க யோகம் எனப்படும் எட்டுப் படிகள் கொண்ட யோகப் பாதையை விளக்குகிறது. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், மற்றும் சமாதி ஆகிய எட்டு அங்கங்கள் ஒவ்வொன்றையும் இந்நூல் ஆழமாக ஆராய்கிறது. இந்நூல், ஒழுக்க நெறிகளின் முக்கியத்துவத்தையும், உடல் பயிற்சிகள் மற்றும் மூச்சுப் பயிற்சியின் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது. மனதை உள்முகமாகத் திருப்பி தியானம் செய்வதன் மூலம் சமாதி நிலையை அடைந்து, ஈசனுடன் ஒன்றிணைவது எப்படி என்பதையும் விளக்குகிறது.
குண்டலினி சக்தியின் முக்கியத்துவத்தையும், அது நம் ஆன்மீக பயணத்தில் எப்படி உதவுகிறது என்பதையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது. இந்த நூலை வெறும் வாசிப்பாக இல்லாமல், பயிற்சியின் மூலம் அனுபவித்து உணரும்போது, திருமூலர் காட்டிய பாதையில் மன அமைதி மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை அடையலாம். வாருங்கள், இந்த அற்புதமான யோகப் பாதையை நாமும் பயின்று நற்பலன் பெறுவோம்.
படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👇
அழகப்பா பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட போது, பல்கலைக் கழகத்தில் முதன் முதலாகப் பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன், பல்கலைக்கழகத்தில் 1999ம் ஆண்டு தேர்வுப் பிரிவில் பணியாற்றி வந்தபோது “திசை தெய்வங்களைத் தொழும் திருவள்ளுவர்“, “குறலிலும் சோதிடம்” என்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதினேன். அக்கட்டுரைகளை அப்போது காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி முதவராகப் பணியாற்றி வந்த முருகசாமி ஐயா அவர்களிடம் காண்பித்தேன். அவர்கள் என்னைப்பெரிதும் உற்சாகப் படுத்தி அவற்றை இதழ்களில் வெளியிடுமாறு அறிவுறுத்தினார்கள். இதனால் “வள்ளுவரும் வாஸ்துவும்” என்ற எனது கட்டுரை 2000ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில், முதன் முதலாகத் தினபூமி – ஞாயிறு வார இதழில் வெளியாகியது. கல்வியாளர்கள் மத்தியில் அக்கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. திருக்குறளின் அதிகார அமைப்பு முறைக்கு யாரும் மறுக்கமுடியாத அளவிற்கு விளக்கம் அளித்ததற்காக அனைவரும் என்னைப் பாராட்டினார்கள். அவ்வாறு பாராட்டியவர்களுள் முனைவர் இரா. பாலசுப்பிரமணியன் ஆவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவர் என்னிடம் ஒருமுறை “நீங்கள் கட்டுரைகள் எழுதினால் மட்டும் சிறப்புடையது ஆகாது, கல்வித் தகுதியையும் வளர்த்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுரை வழங்கினார். அவரது அறிவுரையை ஏற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்முதுகலை (M.A. தமிழ்) பயின்றேன்.
பின்னர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.)பயின்றேன். அப்பாடத்திட்டத்தின் ஒருபகுதியாகத் திருப்பூவணம் திருக்கோயில் பற்றிய ஆய்வினை மேற்கொண்டேன். ஆய்வு தொடர்பாகத் திருமுறைகளையும் மற்றும் பல ஆன்மிக நூல்கனையும் கற்றேன். திருப்பூவணம் தொடர்பான அனைத்து நூல்களையும் சேகரித்துப் படித்தும், திருக்கோயில் அமைப்பை பலவராக ஆராய்ந்தும் எனது ஆய்வினை நிறைவு செய்தேன்.
எனது ஆய்வியல் நிறைஞர் ஆய்வு தொடர்பாகத் திருப்பூவணப் புராணப் புத்தகத்தைத் தேடி அலைந்தேன். எங்குதேடியும் யாரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. இறுதியாகக் காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியின் அப்போதைய முதல்வர் உயர்திரு. முருகசாமி ஐயா அவர்கள் திருப்பூவணப் புராணப் புத்தகம் ஒன்றைக் கொடுத்து உதவினார்கள். உடனே திருப்பூவணம் சென்று திருப்பூவணநாதரின் திருக்கண் பார்வைக்குப் புத்தகத்தைக் காண்பித்து ஆசி பெற்றேன். புத்தகம் அச்சிடப் பெற்று 100 வருடங்களுக்கும் மேலானதால், தொட்டால் காகிதம் ஒடிந்து விடும் நிலையில் இருந்தது. மிகவும் சிரமம் மேற்கொண்டு புத்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் நகல் எடுத்துக் கொண்டு மூலப்புத்தகத்தை ஐயா அவர்களிடம் நன்றியுடன் திரும்பக் கொடுத்தேன். ஐயா அவர்கள் செய்த உதவிக்குத் திருப்பூவண மக்கள் அனைவரும் மற்றும் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் நன்றி உடையோர்களே. புத்தக நகலைக் கொண்டு மீண்டும் புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்ற நோக்கில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணினியின் உதவி கொண்டு தட்டச்சு செய்து வந்தேன். தற்போது புத்தகம் முழுமையடைந்துள்ளது. புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிடத் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் நிதியுதவியும் கிடைத்துள்ளது.
எனது தந்தையார் மானாமதுரைத் தாலுகா மாரநாடு கிராமத்தைச் சேர்ந்த நா.ரா.கிருஷ்ணன் அம்பலம் அவர்கள் காவல்துறையில் காவலராகத் (Police Constable) திருப்பூவணத்தில் 1969 74ம் ஆண்டுகளில் பணியாற்றினார். அப்போது நான் திருப்பூவணம் பள்ளியில் பயிலும் காலத்தில் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடும் பேறு கிடைக்கப் பெற்றுள்ளேன். கடைநிலையிலிருந்த என்னை, கோயில் தொடர்பான நூல்கள் எழுதும் நிலைக்கு உயர்த்திய திருப்பூவணநாதரின் திருவருளை எங்ஙனம் நான் எடுத்துரைப்பது! திருப்பூவணநாதரின் திருவருளால் சுமார் 16 கட்டுரைகளுக்கும் மேலாக எழுதி வெளியிடும் பெருமை கிடைக்கப் பெற்றுள்ளேன்.
முனிவர்கள் ஓதிய புராணத்தைத் தமிழில் 388 ஆண்டுகளுக்கு முன்னர் கந்தசாமிப் புலவர் பாடிய இப்புராணப் பாடல்களின் ஒவ்வொரு எழுத்தையும் தட்டச்சு செய்து பிழைத்திருத்தம் பார்த்து அச்சிட்டு வெளியிடும் பெரும்பேறு கிடைக்கப் பெற்றுள்ளேன். இந்நூலில் பிழைகள் ஏதுமிருந்தால் அவற்றைப் “பிழை பொருத்தருளும் பூவணநாதர்” போல், பொறுத்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அறியப்படும் குறைகளை எனக்குத்தெரிவித்துத் திருத்திக் கொள்ள உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். இந்நூலை அகம் மகிழ்ந்து வாசிப்போர் அனைவரும், திருப்பூவணநாதரின் திருவருளால், அவர்களது உயர்ந்த உள்ளம் போல உயர்வான வாழ்வு பெற்று வளமுடன் வாழ்ந்திட திருப்பூவணநாதரின் திருவடி அருளை நினைந்து வாழ்த்துகிறேன்.
திருச்சிற்றம்பலம்
அன்புடன்
முனைவர். கி. காளைராசன்
படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👇
ரொம்ப நாளாச் சிதம்பரம் பத்தி எழுதணும்னு ஆசை. நீண்ட தொடராகவே எழுத முடியும் ஆகவே இதிலேயே தொடர்ந்து எழுதினேன்.
அநுபவம் இல்லாத என் எழுத்தில் குறைகள் நிறைய இருக்கும். குறைகள் கண்ட இடத்தில் சுட்டிக்காட்டுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். பொதுவாகச் சைவர்களுக்குக் “கோயில்” என்றாலே அது சிதம்பரத்தைத் தான் குறிக்கும்.
சிதம்பரம் கோயில் காலத்தால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாத அளவுக்குப் பழமை வாய்ந்த ஒன்று என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்போது இங்கே நடராஜரே பிரதானம். ஆனால் இங்கே நடராஜர் வருவதற்கு முன்னாலே சிவலிங்க ஸ்வரூபம் தான் இருந்திருக்கிறது.
அதற்குப் பின்னர் தான் நடராஜ ஸ்வரூபம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தில்லை வாழ் அந்தணர்களும் நடராஜரை வழிபடுவதற்காகவே அவரோடு வந்தார்கள். முதன் முதல் இந்த ஸ்தலம் தில்லை வனமாக இருந்தது. ஆகவே இன்றும் இதற்குத் தில்லை என்ற பெயரும் உண்டு. மருத்துவ குணம் நிரம்பிய தில்லை மரத்திற்குப் பல அபூர்வமான விசேஷங்கள் உண்டு.
அவை எல்லாவற்றையும் ஓரளவு தருவதற்கும், தில்லை பற்றிய முக்கியமான விவரங்கள் தருவதற்கும் இந்தப் பதிவு. முக்கியமாகத் தில்லை நடராஜரின் தாண்டவக் கோல அர்த்தங்கள், கோயிலின் வழிபாட்டு முறை, தில்லை வாழ் அந்தணர்களின் வரலாறு, நடராஜர் முகமதியர் படையெடுப்பின் போது கேரளாவில் போய் இருந்த வரலாறு என்று பல புதிய தகவல்கள் இடம் பெறும்.
கொஞ்சம் பல புத்தகங்களையும் படித்துத் தகவல்கள் திரட்டிக் கொண்டே எழுதி உள்ளேன். தவறுகளை மன்னித்துப் பொறுத்து இருந்து படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கீதா சாம்பசிவம்
ஒவ்வொரு மின்புத்தகத்திற்கும் பதிப்புரிமை மாறுபடலாம்
படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👇
ஆசிரியர் : சி. ஜெயபாரதன்
பொருளடக்கம்
சமர்ப்பணம்
தீண்டப்படாத சீதா
நாடக நபர்கள்
1. சீதா நாடு கடத்தப்படல்
2. வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்
3. ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு
4. அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம்
5. லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு
6. முடிவை நோக்கிச் சீதா
Picture Credits
சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை
ஆசிரியரைப் பற்றி
ஒவ்வொரு மின்புத்தகத்திற்கும் பதிப்புரிமை மாறுபடலாம் மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👇
ஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்
இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயனம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.
கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோலத் தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.
கம்பராமாயணத்தை தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் உரைநடையில் எழுதிக் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டுள்ளார். அதை மின்னூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
ஒவ்வொரு மின்புத்தகத்திற்கும் பதிப்புரிமை மாறுபடலாம் மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
படிக்க இங்கே கிளிக் செய்யவும்👇
ஆசிரியர் : குமரன்
அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. குமரன் அவர்களின் இந்த புத்தகம் மூலம் அபிராமி அந்தாதிக்கு ஓரு எளிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சில பாடல்களுக்கு அந்தாதித் தொடை, அருஞ்சொற்பொருள், எதுகை மற்றும் மோனையுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அந்தப் பாடலினால் எற்படும் பலனும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டாள் அருளிய திருப்பாவை | படிக்க இங்கே கிளிக் செய்யவும்
சுஜாதா தேசிகன்
ஆண்டாள் அருளிய திருப்பாவை” என்னும் இந்த நூல், கோதை ஆண்டாள் இயற்றிய முப்பது பாடல்களைக் கொண்ட திருப்பாவையின் சிறப்பை விளக்குகிறது.
மார்கழி மாதத்தில், பாவை நோன்பின்போது பாடப்படும் இந்தத் தமிழ்மாலை, பக்தி இலக்கியத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்நூல், ஆண்டாளின் வாழ்க்கை, அவளுடைய கிருஷ்ண பக்தியின் ஆழம், பாவை நோன்பின் முக்கியத்துவம் மற்றும் திருப்பாவையின் ஆன்மீக மற்றும் இலக்கியச் செழுமை போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. திருப்பாவையில் வரும் ஒவ்வொரு பாடலுக்கும் எளிய விளக்கமும், உரையும், அதன் உட்பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில், ஆண்டாள் தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்கள், அன்றாட வாழ்வின் நடைமுறைகள், மற்றும் இயற்கை வருணனைகள் அனைத்தும் பக்தியுடன் கலந்த இலக்கிய நயத்தோடு அமைந்துள்ளன. ராமானுஜரின் திருப்பாவை மீதான ஈடுபாடும், அவர் கொண்ட பக்தியும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் திருப்பாவையுடன் தொடர்புடைய சம்பிரதாயங்களும், அதற்கான முக்கியத்துவமும் விளக்கப்பட்டிருக்கின்றன. மார்கழி மாதத்தின் சிறப்பையும், திருப்பாவையின் முப்பது பாடல்களையும் படித்து, ஆண்டாளின் பக்தியில் மூழ்கி, பேரின்பம் அடைய வாருங்கள்.
