கோப்பாய் காவல் நிலையத்தில் தீ விபத்து

Fire breaks out at Kopai Police Station

கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பொலிஸ் நிலைய பெயர் பலகை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், வழக்கொன்றின் சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த படகொன்றும் தீயில் எரிந்துள்ளது.

பொலிஸ் நிலைய வளாகத்தில் காணப்பட்ட குப்பைகளை திங்கட்கிழமை (16) மாலை வேளை பொலிஸார் எரித்த வேளை அந்த தீ பரவி பெயர் பலகை , படகு மற்றும் அருகில் நின்ற மா மரம் என்வற்றில் பற்றி எரிந்தது.

அதனை அடுத்து பொலிஸார் தீயணை அணைக்க நடவடிக்கை எடுத்ததுடன், யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து தீயிணை அணைத்தனர்.

Related posts

காபூல் போதைப் பழக்க சிகிச்சை மையத்தில் வான்வழி தாக்குதல்: பலர் உயிரிழந்ததாக அச்சம், பாகிஸ்தானை குற்றம் சாட்டும் தாலிபான்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போக்குவரத்து மையங்கள் மீது தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள்; வளைகுடா பதற்றம் மேலும் தீவிரம்

ஐந்து வாரம் வயதான குழந்தையை கொன்ற வழக்கில் தந்தைக்கு குற்றம் நிரூபணம்