இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகள் இருக்கைப் பட்டை அணிய வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது!
அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர் ஆசனப்பட்டி அணிவது தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் நேற்று (20-03-2026) முதல் அமுல்படுத்தப்படவிருந்தது. எனினும், இது தொடர்பான புதிய விசேட வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இந்த சட்டம் அமுல்படுத்தப்படுவது தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.