தூத்துக்குடியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், அதிர்ஷ்டவசமாக 60 பயணிகள் உயிர் தப்பினர்.

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு ஒன் டு ஒன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது, பஸ்ஸில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்து சுதாரித்துக் கொண்ட பயணிகள், அலறியபடி பஸ்ஸில் இருந்து வெளியேறினர். இதனால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் 60 பேர் உயிர்தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். பஸ்ஸில் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

இரானிய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் தெற்கு நகரில் பலர் காயம்

கூட்டணியில் 10 இடங்களுக்கும் குறைவாகக் கிடைத்தால் நாங்கள் ராஜினாமா செய்வோம் – தே.மு.தி.க

பிளஸ் 2 மாணவர் கொலை செய்யப்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, குற்றவாளியைக் கைது செய்ய காவல்துறைக்கு உதவிய ஒரு தகவலை உள்ளூர் தோட்டக்காரர் ஒருவர் அளித்துள்ளார்.